web log free
September 08, 2024
kumar

kumar

ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான கோப்புகள் ஒரு வாரத்திற்குள் பொதுமக்களிடம் முன்வைக்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர திஸாநாயக்க பத்து நாட்களுக்கு முன்னர் இணையத்தில் பேட்டியளித்திருந்தார்.

ஆனால் நேரம் செல்லச் செல்ல சமூக வலைதளங்களில் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதேநேரம், மே 03ஆம் திகதி உஷாராக இருக்குமாறு அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டின் தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

2018 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிலுனர்களின் நிரந்தர நியமனங்கள் தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சின் செயலாளர், 2018 ஆம் ஆண்டு தேசிய கல்வியற் கல்லூரியின் பயிற்சியை நிறைவு செய்துள்ள 4 ஆயிரத்து 643 ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமங்களை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், மே 4 ஆம் திகதி நியமன கடிதங்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தனது கட்சி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை (காண்பிக்கும் ) நிரூபிக்கும் என ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"அடுத்த வாரம் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பதை அனைவரும் பார்க்க முடியும், இப்போது அதை எப்படிச் செய்யப் போகிறோம் என்பதை நான் வெளிப்படுத்த மாட்டேன்," என்று அவர் தெரிவித்தார் மேலும் .

"ஜனாதிபதி தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும், பின்னர் அரசாங்கத்தின் தூண்களில் சமநிலையை உறுதிப்படுத்த அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பின்பற்றப்பட வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஏன் வித்தியாசமான பாதையில் செல்கிறார் என வினவியதற்கு, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடப் போவதில்லை என வெல்கம தெரிவித்துள்ள போதிலும் அவர் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தி உடன் இருப்பதா.எவ்வாறாயினும் கடைசியில் அவர் ஐக்கிய மக்கள் சக்தி உடன் தான் வருவார் எனவும் தெரிவித்தார்

60 மருந்துகளின் விலை 40% அதிகரிப்பு 60 மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை தற்போதைய விலையில் இருந்து 40% அதிகரித்து நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சரினால் அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, பாராசிட்டமால் மாத்திரைகள் (500மிகி ரூ.4.16), அசித்ரோமைசின் மாத்திரைகள் (250மிகி ரூ.88.91), ஆஸ்பிரின் மாத்திரைகள் (75மிகி ரூ.7.08), மெட்ஃபோர்மின் மாத்திரைகள் (500மிகி ரூ.9.34) போன்ற பொதுவான மருந்துகளின் விலை மற்றும் salbutamol காப்ஸ்யூல் (200mcg ரூ. 9.45) அதிகரிக்கப்பட்டுள்ளது

நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், தற்போது நாட்டின் விற்பனை வரியை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என நிதியமைச்சர் அலி சப்ரி BBC க்கு கூறியுள்ளார்.

BBCக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், அலி சப்ரி, 2019 ஆம் ஆண்டில் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) விகிதத்தை 8% ஆக பாதியாகக் குறைத்தபோது அரசாங்கம் தவறு செய்ததாக ஒப்புக்கொண்டார்.

 தினசரி அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அடுத்த எட்டு மாதங்களில் தேசத்திற்கு $4bn (£3.2bn) தேவைப்படுகிறது. “வரிகளை அதிகரிக்க வேண்டும். எங்களிடம் உள்ள வருவாய் மற்றும் செலவின இடைவெளியைக் குறைக்க வழிவகை செய்ய வேண்டும்,'' என்றார்.

 அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை நம்பியிருக்கும் இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு தற்போதைய VAT நிலை "நிச்சயமாக நிலையானது அல்ல" என்று கூறிய அவர், விகிதம் 13% அல்லது 14% ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றார். 

 கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் 2019 இல் வரிகளை குறைக்கும் நடவடிக்கை தவறானது என்பதை ஒப்புக்கொண்ட அவர், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட அரசாங்கம் நீண்ட நாள் காத்திருந்துள்ளதாகவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச, இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்கத் தவறினால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தனக்கு அச்சுறுத்தல் அழைப்புகள் வந்துள்ளதாக இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.

“நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தில் இணையுமாறு எனக்கு 24 மணி நேரமும் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. என்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் திட்டம் இருப்பதாக ஒரு அழைப்பாளர் என்னிடம் கூறினார். எனக்கு எப்பொழுதும் பொது மக்களின் ஆதரவு இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என மீரிகமவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

"SJB யில் இருந்து யாரும் இடைக்கால அரசாங்கத்தில் சேர மாட்டார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

பிரிட்டனில் பாராளுமன்ற அலுவல்கள் நேரத்தில், 'மொபைல் போனில்' ஆபாச படம் பார்த்த அமைச்சர் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஆளும் பழமைவாத கட்சியைச் சேர்ந்த 12 பெண் எம்.பி.,க்கள், அரசு தலைமை கொறடாவை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், பார்லி., அலுவல் நேரத்தில், அமைச்சர் ஒருவர் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரை பெற்ற பழமைவாத கட்சியின் கொறடா கிறிஸ் ஹீடன் ஹாரிஸ், அவற்றை பார்லி., குறை தீர்ப்பு குழுவின் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

''இக்குழு அளிக்கும் அறிக்கையின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஹீடன் ஹாரிஸ் உறுதி அளித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினம் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வருவதால், அடுத்த நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸ் அதிகாரிகள் தாக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அங்கு தற்காப்புக்காகவே செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் வாகனங்களில் போடப்பட்டிருந்த தடைகளை அகற்ற பொலிஸாருக்கு போராட்டக்காரர் அனுமதிக்க மறுத்துவிட்டார்.

அவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கை ஒன்றே மேற்கொள்ளப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 

இலங்கை நாட்டில் தவறான கொள்கை முடிவின் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா இலங்கையில் பொருளாதார அடித்தளத்தையே அசைத்து விட்டது. இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையை சார்ந்தே இருந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாத்துறை முடங்கியதால் இலங்கையின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பும் வேகமாக சரிந்து விட்டது.

அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அங்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு, அரிசி, பருப்பு, பால், டீ உள்பட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது.

இலங்கையில் கடைகளின் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் பெட்ரோல், டீசல், மண்எண்ணெய், சமையல் எரிவாயு, பால் பவுடர் உள்பட அனைத்து பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இதனால் அங்கு மக்கள் கடந்த 21 நாட்களாக தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கொழும்புவில் அதிபர் பதவி விலக கோரி முற்றுகை போராட்டமும் நடந்து வருகிறது.

ஆனாலும் இலங்கை அரசு பதவி விலகாமல் போராட்டக்காரர்களை சமாளித்து வருகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்தும் ஐ.எம்.எப். போன்ற சர்வதேச அமைப்புகளிடம் இருந்தும் இலங்கை கடன் உதவி கேட்டுள்ளது.

இந்த சூழலில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உதவி வருகிறது. பெட்ரோல், டீசல், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருவதுடன் சென்ற மாதம் இந்தியா 100 கோடி டாலர் கடன் உதவியும் செய்துள்ளது. தற்போது கூடுதலாக 50 கோடி டாலர் கடன் உதவி வழங்குகிறது.

மத்திய அரசு இலங்கைக்கு உதவி செய்யும் அதே நேரத்தில் அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால் இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

இது குறித்து மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அதற்கு இதுவரை மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை.

இதனால் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவுவதற்கு மத்திய அரசின் அனுமதி கோரி சட்டசபையில் இன்று அரசினர் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து முன்மொழிந்த அந்த தீர்மானம் வருமாறு:

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள் முதலிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க தயாராக உள்ளது.

இதற்கு மத்திய அரசு தேவையான அனுமதி வழங்க வேண்டும். மத்திய அரசிற்கு ஏற்கனவே மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. எனினும் இது குறித்து மத்திய அரசிடமிருந்து எந்தவிதமான தெளிவான பதிலும் இதுவரை பெறப்படாத நிலை உள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து, உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் பேசினார்கள். அதன் பிறகு அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.