web log free
July 27, 2024
kumar

kumar

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தேசிய சபை கூடியபோதே செந்தில் தொண்டமான் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கட்சியின் தவிசாளராக மருதபாண்டி இராமேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்

தேசிய சபை கூட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வழிநடத்தினார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து அசௌகரியங்களுக்கும் மன்னிப்பு கோரியுள்ளார்.

அமைச்சரின் வருகை காரணமாக வெலிமடையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்றிருந்த சிலர் கடும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியதாக இணையத்தில் பகிரப்பட்ட காணொளிக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

"வெலிமடையில் நான் திட்டமிடப்பட்ட நிகழ்வு எதுவும் இல்லை, இது ஒரு தவறான புரிதல். எனது பெயரால் பரவிய வதந்தி" என்று அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் அப்பகுதிக்கு வருவதாகக் கூறப்படும் தகவலையடுத்து வாகனங்கள் உட்பட வரிசையில் நின்ற பொதுமக்கள் வேறு பாதையில் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் மீது கொதித்தெழுந்த மக்கள், நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்தையும் கண்டித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கோரினார்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து அசௌகரியங்களுக்கும் முதலில் தாம் மன்னிப்புக் கோர விரும்புவதாகக் கூறிய அமைச்சர், இது கடினமான காலங்கள், ஆனால் "நாங்கள் அவற்றை சமாளிப்போம்" என்று தான் நம்புவதாகக் கூறினார்.

வெலிமடையில் தமக்கு திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லை என்று மேலும் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, இது தவறான புரிதல் மற்றும் வதந்தி என கூறினார்.

அட்டன் நகரில் உள்ள பிரதான வழிகளை மறித்து சாரதிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் இன்று (30.03.2022) போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுளளது. அத்துடன், அட்டன் நகரம் பகுதியளவு ஸ்தம்பிதமடைந்துள்ளது.  

அட்டன் நகரிலுள்ள எரிபொருள் நிலையத்தில் டீசலை பெற்றுக்கொள்வதற்கு நேற்று (29.03.2022) மாலை முதல் சாரதிகள் காத்திருந்தனர். எனினும், இறுதி நேரத்தில் டீசல் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கடுப்பாகிய சாரதிகள் பொதுமக்களுடன் இணைந்து அட்டன் மணிக்கூட்டு கோபுரம் சந்தியில் நேற்று (29.03.2022) இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொலிஸாரின் தலையீட்டுடன் போராட்டம் நிறுத்தப்பட்டது.  

எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
 
லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இம்மாதம் 4ம், 5ம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

டீசல் பெற்றுக் கொள்வதற்காக இன்று (30) மற்றும் நாளை (31) திகதிகளில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திட்டமிட்டவாறு 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் வந்த கப்பலில் இருந்து டீசலை இறக்கமுடியாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரருமான கிளென் மாக்ஸ்வெல், தமிழ்நாட்டை சேர்ந்த பெண்மணி வினி ராமன் அவர்களுடைய திருமணம் தமிழ்நாடு முறைப்படி நடந்தது.

மாக்ஸ்வெல்லும், வினி ராமனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். வினி ராமன் தமிழ்நாட்டை சேர்ந்த பெண், ஆஸ்திரேலியா நாட்டில் வசித்து வருகிறார். இருவருக்கும் காதல் மலர்ந்தது.

ஆஸ்திரேலியா முறைப்படி அங்கு தன்னுடைய எங்கேஜ்மெண்ட் முடித்தாலும், திருமணம் தமிழ்நாடு முறைப்படி இருவரும் செய்து கொண்டனர்.

சொந்தங்கள் சூழ இருவரும் மாலை மாற்றிக் கொண்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல்.

 

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (30) நாடளாவிய ரீதியில் 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ வரையான பிரிவுகளில் காலை 8 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில் கட்டங்கட்டமான 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேவேளை, எம்,என், ஓ,எக்ஸ், வை, இஸட் பிரிவுகளுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சிகிரியா, எஹெலகல பிரதேசத்தில் இலங்கைக்கு வருகை தந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் பிறப்புறுப்பை தொட்டு துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஹோட்டல் உரிமையாளரை சீகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

33 வயதான பெல்ஜிய சுற்றுலா பயணி ஒருவர் மார்ச் 3-28 ஆம் திகதி சிகிரியா பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இந்த பெண் பல்வேறு நாடுகளுக்குச் சென்று சம்பந்தப்பட்ட நாடுகள் தொடர்பில் சஞ்சிகைகளுக்கு கட்டுரைகளை எழுதி வருவதாகவும், இம்முறை இலங்கை தொடர்பான கட்டுரையை எழுதுவதற்காக இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு வந்த அவர், சிகிரியா பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளார்.

அந்தப் பெண்ணிடம் பேசிய ஹோட்டல் உரிமையாளர், தான் ஒரு சீன அக்குபஞ்சர் மருத்துவர் என்றும், பலவிதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும், முதுகுவலியைச் சொல்லி, அவளது உடலின் பல்வேறு பாகங்களைத் தொட்டு, மார்பகங்களைத் தடவிவிட்டதாகவும், புகாரில் கூறப்பட்டுள்ளது. பிறப்புறுப்புகளையும் தடவ முயன்றார் என்று கூறப்படுகிறது. 

சம்பவத்தின் பின்னர் ஹோட்டலை விட்டு வெளியேறிய அவர் சீகிரிய பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு சுற்றுலா விடுதிக்கு சென்று சீகிரிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சீகிரிய, எஹெலகல பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரை சீகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாங்கத்திற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை கண்டித்து இனவாத கருத்துக்களை முன்வைத்த தொலைக்காட்சி ஊடகவியலாளரை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.

கேள்வி- இந்த நெருக்கடிகளை பயன்படுத்தி தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசியல் தீர்வு குறித்து பேசுகின்றது ? தடை செய்யப்பட்ட அமைப்புகள் மீதான தடையை நீக்கவேண்டும் என கோருகின்றது-இவை உண்மையா?

ரணில்- தடைசெய்யப்பட்ட அமைப்புகள் என்றால் என்ன?

ஊடகவியலாளர் - விடுதலைப் புலிகளிற்கு நிதி வழங்கிய அமைப்புகளே தடை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் – அவ்வாறான அமைப்புகள் பல தடை செய்யப்படவில்லை, இந்த தடை அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடைமுறைக்கு வந்தது, தடையை நீக்கவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் பிரச்சினை உருவாகின்றபோது நாங்கள் இனவாதத்திற்கு திரும்புகின்றோம், இது பழைய கதை.

ஊடகவியலாளர் – இல்லை தற்போது இது பற்றி பேசப்படுகின்றது

ரணில் இது குறித்து பேசப்படுகின்றது ஏனென்றால் கதைப்பதற்கு வேறு விடயங்கள் இல்லை,

மீண்டும் இனவாதத்தை பிராந்தியவாதத்தை பயன்படுத்த முயற்சி இடம்பெறுகின்றது- இதனால் என்ன பயன்? இதன் மூலம் மக்களிற்கு பெட்ரோல் கிடைக்குமா?

தற்போது நாங்கள் உண்மையை பற்றி பேசுவோம், அவர்கள் உள்ளுர் பற்றி பேசினார்கள், அவர்கள் தேசத்தை காப்பாற்றவேண்டிய தேவை உள்ளது என தெரிவித்தார்கள், அவர்கள் உயிர்த்த ஞாயிறு குறித்து கதைத்தார்கள்-

இவை அனைத்தையும் ஒருபக்கம் வைத்துவிடுவோம், தமிழ் மக்களிற்கு நியாயபூர்வமான பிரச்சினைகள் உள்ளன, எங்களின் பௌத்த மதகுருமார் கூட அவற்றிற்கு தீர்வை காண வேண்டும் என விரும்புகின்றனர்,

எங்களுடன் வர்த்தகங்களில் ஈடுபட்ட பல அமைப்புகளை இந்த அரசாங்கம் தடை செய்தது எனக்கு தெரியும்.

இதன் காரணமாக சுமந்திரன் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கவேண்டும் என்கின்றார் அது நியாயமானது.

இதற்கு பின்னால் விடுதலைப்புலிகள் இல்லை,விடுதலைப்புலிகள் தற்போது இல்லை ,குண்டுவீச்சுகள் இடம்பெறுவது இல்லை,பயங்கரவாதம் இனி உருவாகாது,எனக்கு அது உருவாகாது.த டைசெய்யபப்பட்ட அமைப்புகளிடம் தற்போது பணம் இல்லை என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

தமிழ் திரையுலகில் நடிகை லைலா கள்ளழகர் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இயக்குனர் சங்கரின் முதல்வன் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.

பின்னர், கார்த்திக் உடன் ரோஜாவனம், அஜித் உடன் தீனா மற்றும் பரமசிவன், சூர்யா உடன் நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து மற்றும் மவுனம் பேசியதே, விக்ரம் உடன் தில் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றார்.

கடைசியாக அஜித்தின் திருப்பதி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அவரது சிரிப்புக்கு என்றே ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் இருந்த காலமும் உண்டு.

இதன்பின்பு ஈரானிய நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு, மும்பைக்கு சென்று குடும்ப வாழ்க்கையில் பயணிக்க தொடங்கி விட்டார். இதனால், நடிப்பு பக்கம் அவர் தலை காட்டவில்லை.

இந்நிலையில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தயாராகி வரும் சர்தார் படத்தில் நடிகை லைலா நடிக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது.

அவர் முழுநீள கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக 15 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தும் முடித்து விட்டார்.

லைலா நடிப்பதற்கு முன்பு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சிம்ரன் முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்றால் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டன. வேறு சில படவேலைகளில் இருந்த சிம்ரன், இந்த படத்திற்கு தேதி கொடுக்க இயலவில்லை.

அதனால், இந்த கதாபாத்திரத்திற்கு லைலா சரியாக பொருந்துவார் என படதயாரிப்பாளர்கள் உணர்ந்தனர் என்று படப்பிடிப்பு வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், 16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வரும் நடிகை லைலாவை வரவேற்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.