web log free
May 19, 2024
kumar

kumar

 

கட்டுநாயக்க 18வது மைல் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மீது சாணம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விமான நிலையத்தினால் வழங்கப்பட்ட முன்னுரிமைக் கடிதங்களைப் பெற்றவர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்த தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு விமான நிலையத்தைத் தவிர, ஏனைய தனியார் வாகனங்களும் அந்த இடத்தில் எரிபொருள் வழங்கப்பட்டது. ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை குறித்த நிரப்பு நிலையம் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

பரபரப்பாக நகரும் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு விஷயத்தில் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு சிலருக்கு குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தாலும், வயதை காரணம் காட்டி அதில் இருந்து ஒதுங்கி கொள்கிறார்கள்.

ஆனாலும் ஒரு சிலர் சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்றும் நிரூபித்து வருகின்றனர். இந்த நிலையில் 62 வயது மூதாட்டி ஒருவர் 6,129 அடி உயர மலையில் ஏறி சாதனையை நிகழ்த்தி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள அனுமந்தநகர் பகுதியில் வசித்து வருபவர் நாகரத்னம்மா (வயது 62). இளம்வயதில் மலையேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு மலைகளில் ஏறியுள்ளார். இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் பிள்ளைகள், கணவரை கவனிக்கும் பொருட்டு அவர் மலையேற்றம் செல்வதை தவிர்த்து வந்தார். கடைசியாக தனது 22 வயதில் நாகரத்னம்மா மலையேற்றம் சென்று இருந்தார். அதன் பின்னர் அவர் மலையேற்றம் செல்லவில்லை.

இந்த நிலையில் மகன், மகளுக்கு திருமணம் முடிந்து விட்டதாலும், கணவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாலும் மீண்டும் மலையேற்றத்தில் ஈடுபட நாகரத்னம்மா விரும்பினார். இதுகுறித்து அவர் தனது மகனான சிவக்குமார் என்பவரிடம் தெரிவித்து இருந்தார். தாயின் ஆசையை நிறைவேற்ற சிவக்குமாரும் விரும்பினார். இந்த நிலையில் அண்டை மாநிலங்களான கேரளா-தமிழ்நாடு எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 6,129 அடி உயர அகஸ்தியர் மலையில் மலையேற்றம் செய்ய நாகரத்னம்மா முடிவு செய்தார்.

இதையடுத்து மகன் சிவக்குமாருடன் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரெயில் மூலம் சென்று இருந்தார். இதன்பின்னர் அகஸ்தியர் மலையில் மலையேற்றம் மேற்கொள்ள இருந்த 13 பேர் குழுவுடன், நாகரத்னம்மாவும் இணைந்து கொண்டார். அவரை மற்றவர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர்.

ஆனாலும் மூதாட்டி என்பதால் நாகரத்னம்மா மலையேறி விடுவாரா என்று வனத்துறையினர் யோசனையில் ஆழ்ந்தனர். ஆனால் அவர்களின் யோசனை தவறு என்பதை நிரூபிக்கும் விதமாக இளைஞர்களுக்கு போட்டியாக நாகரத்னம்மா வேகமாக மலையேறினார். மலை உச்சிக்கு சென்ற அவர் குழந்தையை போல துள்ளி குதித்தார். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் நாகரத்னம்மா புடவை கட்டி கொண்டு மலையேறி உள்ளார்.

இதனை வனத்துறை அதிகாரி ஒருவர் வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ பார்த்த பலரும் நாகரத்னம்மாவை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து நாகரத்னம்மா கூறும்போது, எனக்கு மலையேற்றம் ஏறுவதில் அதிக ஆர்வம் உண்டு. ஆனால் கணவர், மகன், மகளை கவனிக்கும் பொருட்டு கடந்த 4 தசாப்தங்கள் அதாவது 40 ஆண்டுகள் மலையேற்றம் செல்லவில்லை.

40 ஆண்டுகள் கழித்து மலையேற்றம் சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் நாட்களிலும் எனது மலையேற்ற பயணம் தொடரும் என்றார். அவரது லட்சிய பயணம் தொடர நாமும் வாழ்த்துவோம்!

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. நீண்டகாலமாக மோதல் போக்கும் நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் இடையே உள்ள பிரச்சனை என்ன?. அமெரிக்க அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் முதல் ஜோ பைடன் வரை இதில் தலையிடுவதற்கான காரணம் குறித்த முழு தகவல்கள் வருமாறு:

ரஷ்யா, உக்ரைன் இடையே எல்லை பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. மேலும் நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முயற்சிக்கிறது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவிக்க தொடங்கியது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பக்கபலமாக உள்ளன.

மேலும் ரஷ்யா போர் தொடுக்க உள்ளதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தது. இதற்கிடையே தான் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை துவங்க ரஷ்யா அதிபர் விலாடிமர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக உக்ரைன் தலைநகர் கிவ், மிகப்பெரிய நகரான கார்கியாவில் ரஷ்யா குண்டுகள் வீசி வருகிறது.

உக்ரைன் நாட்டில் கிளர்ச்சியாளர்கள் ஒரு பகுதியில் வசித்து வருகிறார்கள். இதனால் அவ்வப்போது உக்ரைன், கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல் ஏற்படுவது உண்டு. இந்த மோதலில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவுவதும் உண்டு. இதனால் தான் ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்னை ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது.

 உக்ரைன் தனிநாடாக பிரிந்த பிறகு அங்கு நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1991: மாஸ்கோவில் இருந்து விடுதலை அளிப்பதாக சோவியத் குடியரசின் தலைவர் லியோனிட் கிராவ்சுக் அறிவித்தார். பொதுவாக்கெடுப்பு, தேர்தல் மூலம் உக்ரைன் அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

1994: அதிபர் தேர்தலில் லியோனிட் குச்மா என்பவர் லியோனிட் கிராவ்சுக்கை தோற்கடித்தார்.

1999: லியோனிட் குச்மா மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2004: ரஷ்யா சார்ந்த வேட்பாளர் விக்டர் யானுகோவிச் அதிபராக தேர்வானார். தேர்தல் ஓட்டுப்பதிவில் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் ஆரஞ்சு புரட்சி என்ற பெயரில் மறுதேர்தல் நடத்த போராட்டங்கள் வெடித்தன. விக்டர் யுஷ்செங்கோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2005: விக்டர் யுஷ்செங்கோ என்பவர் உக்ரைனை நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதாக கூறி அதிபரானார். முன்னாள் எரிசக்தி நிறுவன உரிமையாளர் யூலியா திமோஷென்கோவை பிரதமராக நியமித்தார். அதன்பின் மேற்கத்திய நாடுகளுடனான பிரச்னைகளில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

* 2008: உக்ரைன் ஒரு நாள் தங்களது கூட்டணியில் இணையும் என நேட்டோ உறுதியளித்தது

ரஷ்யா உக்ரைன் ஒப்பந்தம்

2010: அதிபர் தேர்தலில் யானுகோவிச் வெற்றி பெற்றார். கியாஸ் விலை நிர்ணய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உக்ரைன் கருங்கடல் துறைமுகத்தில் ரஷ்ய கடற்படைக்கான குத்தகை ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டது.

2013: யானுகோவிச்சின் அரசு நவம்பரில் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகம் தொடர்பான பேச்சுக்களை நிறுத்தியது. ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை புதுப்பிக்க விரும்பினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பி தலைவர் கிவ் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டன.

2014: கிவ் நகரில் வன்முறை வெடித்தது. பலர் கொலை செய்யப்பட்டனர். பிப்ரவரியில், தப்பியோடிய யானுகோவிச்சை பாராளுமன்ற ஓட்டெடுப்பு மூலம் பதவியில் இருந்து நீக்கினர். அடுத்த சில தினங்களில் கிரிமியாவில் உள்ள பாராளுமன்றத்தை ஆயுதம் ஏந்திய நபர்கள் கைப்பற்றி ரஷ்ய கொடி ஏற்றினர். ரஷ்ய கூட்டமைப்பில் சேருவதற்கான வாக்கெடுப்பு மார்ச் 16ல் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பு மூலம் கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது.

* இதன் தொடர்ச்சியா ஏப்ரலில் உக்ரைன் டான்பாஸின் கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் சுதந்திரத்தை அறிவித்து கொண்டனர். இதனால் அடிக்கடி மோதல்கள் ஏற்பட துவங்கின.

* மே மாதம் உக்ரைனில் நடந்த தேர்தலில் தொழிலதிபர் பெட்ரோ பொரோஷென்கோ அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

* ஜூலை மாதம் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்ற MH17 எனும் பயணிகள் விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடந்தது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியாகினர். இதுபற்றிய விசாரணையில் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பது தெரியவந்தது. ஆனால் ரஷ்யா இதுவரை தாக்குதலை ஒப்புக்கொள்ளாமல் மறுத்து வருகிறது.

2017: இலவச சரக்கு விற்பனை செய்வது தொடர்பாக உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியங்களுக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைன் நாட்டினர் விசா இன்றி பயணிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. இது ரஷ்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

2019: புதிய உக்ரேனிய ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் முறையான அங்கீகாரத்தைப் பெற்றது. இது கிரிமீயம் கோபப்படுத்தியது. கிரெம்ளினைக் கோபப்படுத்தியது.

2019: கிழக்கு உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதாகவும், ஊழலை ஒழிப்பதாகவும் கூறி முன்னாள் நகைச்சுவை நடிகர் விலாடிமைர் ஜிலென்ஸ்கி வாக்குறுதி அளித்து ஏப்ரலில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு போரோஷென்கோவை தோற்கடித்தார். மேலும் அவரது கட்சி ஜூலையில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றது.

* மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி பயத்தில் இருந்த டொனால்ட் டிரம்ப், ஜிலென்சிகியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜோபைடன் மகன் உக்ரைனில் மேற்கொள்ளும் தொழில், வர்த்தகங்கள் குறித்து விசாரிக்க வலியுறுத்தினார்.

2020 மார்ச்: கொரோனாவை தடுக்கும் வகையில் உக்ரைன் தனது நாட்டு எல்லைகளை மூடியது.

* ஜூன் 2020: கொரோனாவால் பொருளாதாரத்தில் நசுங்கிய உக்ரைனுக்கு சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எப்) 5 பில்லியன் அமெரிக்க டாலர் உதவி செய்தது.

ஜன. 2021 - உக்ரைனை நேட்டோவில் சேர அனுமதிக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோபைடனிடம் பிடனிடம் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார்.

பிப். 2021 - உக்ரைனில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரான விக்டர் மெட்வெட்சுக் பொருளாதாரா தடைகள் விதிக்கப்பட்டது.

* 2021: உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவிக்க துவங்கியது. பயிற்சிக்காக படைகளை குவித்துள்ளதாக கூறியது.

* அக்டோபர் 2021: கிழக்கு உக்ரைனில் முதன்முறையாக துருக்கி பய்ராக்டர் டிபி2 (Bayraktar TB2) ட்ரோனை உக்ரைன் பயன்படுத்தியது. இது ரஷ்யாவை கோபப்படுத்தியது. ரஷ்யா மீண்டும் உக்ரைன் எல்லையில் அதிக படைகளை குவிக்க துவங்கியது.

* டிசம்பர் 7 - உக்ரைனை ஆக்கிரமித்தால் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என என அமெரிக்க அதிபர் ஜோபைடன் ரஷ்யாவை எச்சரித்தார்.

* டிசம்பர் 17 - கிழக்கு ஐரோப்பா, உக்ரைனில் எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் நேட்டோ மேற்கொள்ளாது என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியது.

* 2022 ஜனவரி 14: உக்ரைன் நாட்டு இணையதளங்களை முடக்கும் செயல் அரங்கேற்றப்பட்டது.

* ஜனவரி 17 - உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள பெலாரஸ் நகருக்கு கூட்டு பயிற்சிக்காக ரஷ்ய படைகள் வர துவங்கின.

* ஜனவரி 24: நேட்டோ சார்பில் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. கிழக்கு ஐரோப்பாவில் போர் கப்பல்கள், விமானங்கள் நிறுத்தப்பட்டன.

* ஜனவரி 26: வாஷிங்டன் ரஷ்யாவின் பாதுகாப்பு கோரிக்கைகளுக்கு எழுத்துப்பூர்வ பதிலை முன்வைக்கிறது, மாஸ்கோவின் கவலைகள் பற்றிய "நடைமுறை" விவாதங்களை வழங்கும் அதே வேளையில் நேட்டோவின் "திறந்த கதவு" கொள்கைக்கான உறுதிப்பாட்டை மீண்டும் கூறுகிறது.

* ஜனவரி 28: ரஷ்யாவின் முக்கிய பாதுகாப்பு கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார்.

* பிப்ரவரி 2: கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நட்பு நாடுகளை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற போலந்து மற்றும் ருமேனியாவுக்கு 3,000 வீரர்களை அனுப்புவதாக அமெரிக்கா கூறியது.

* பிப்ரவரி 4 : பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில், புடின், உக்ரைனை நேட்டோவில் சேர அனுமதிக்கக்கூடாது என்ற தனது கோரிக்கைக்கு சீனாவின் ஆதரவை வென்றார்.

பிப்ரவரி 9: உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியது.

பிப்ரவரி 14: ரஷ்யா படையெடுக்கும்போது உக்ரைன் மக்கள் தேசியக்கொடிகளை பறக்கவிட்டு தேசியகீதத்தை பாட உக்ரைன் அதிபர் ஜிலென்ஸ்கி கூறினார்.

பிப்ரவரி 15: உக்ரைன் அருகே பயிற்சிக்குப் பிறகு வீரர்கள் நாடு திரும்புவதாக ரஷ்யா கூறியது. கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகளை சுதந்திர நாடாக அறிவிக்க ரஷ்ய பாராளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பிப்ரவரி 19: புடின் மேற்பார்வையில் ரஷ்ய படைகள் அணுஆயுத பயிற்சியை மேற்கொண்டன.

பிப்ரவரி 21: கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்யா ஆதரவு 2 பகுதிகளை சுதந்திர நாடுகளாக புடின் அங்கீகரித்தார்.

பிப்ரவரி: 24: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் துவங்க ரஷ்யா அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

14 வயது சிறுமி ஏழு மாத கர்ப்பிணியாகிய சம்பவமும் சந்தேகத்தில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது. 

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது, 

குறித்த மாணவிக்கு இணையவழி கல்விக்காக பெற்றோர் வழங்கிய கையடக்கத் தொலைபேசியில் இருந்து இணையத்தில் ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தனக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, முல்லேரியா வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் சென்று முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியும், இதற்கு காரணமான சிறுவனும் ஒரே பாடசாலையில் 10ஆம் மற்றும் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும், நவகமுவ பிரதேசத்தில் வசிப்பவர்களாவர்.

மாணவனின் பெற்றோர்கள் சில மாதங்களுக்கு முன் கல்வி நடவடிக்கைகளுக்காக 27,000 கொடுத்து கையடக்கத்தொலைபேசியை வாங்கிக் கொடுத்துள்ளனர். 

அந்த தொலைபேசியில் இருந்து தான் இணையத்திற்கு பிரவேசித்து ஆபாச காணொளிகளை பார்வையிட்டதாகவும், குறித்த மாணவியிடம் அவ்வாறான முறையில் நடந்து கொண்டதாகவும் சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.

யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்கு வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இருவருக்குமே தாங்கள் செய்த செயலின் தீவிரம் தெரியவில்லை என்பது விசாரணைகளின் போது தெரியவந்ததாக சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுமியும் சிறுவனும் இவ்வாறு நடந்து கொண்ட போதிலும், இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாக தெரியவரவில்லை.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக உள்ளதேன தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 வயது மாணவன் கடுவல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. உக்ரேனில் வசிக்கும் பதினான்கு மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் அவர்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது.

உக்ரேனில் உள்ள பதினான்கு இலங்கை மாணவர்களில் ஆறு பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், அதே நேரத்தில் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் மீதமுள்ள எட்டு மாணவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகிறது.

உக்ரேனில் உள்ள அனைத்து இலங்கையர்களும் அவதானமாக இருக்குமாறும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது உக்ரேனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் அனைத்து இலங்கையர்களுக்கும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு. 

உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷியா, இன்று அதிகாலையில் உக்ரைன் மீது போரை தொடங்கியது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரை முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது.

உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லும்படி ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் உக்ரைன் படைகள் பின்வாங்காமல் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளன. ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக கூறி உள்ளார். மேலும் ரஷியா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருக்கும் அனைத்து மக்களும் முன்வர வேண்டும். ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும். ரஷ்யர்கள் வெளியே வந்து போருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார்.

இலங்கை இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ​பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 டீசல் மற்றும் பெட்ரோல் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பில் இருப்பதாகவும் நெடுஞ்சாலையில் எப்போது, ​​​​எங்கு வாகனங்கள் நிற்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.

 துறைமுகத்தில் தரித்து நின்ற டீசல் கப்பல் நிதிப் பற்றாக்குறையால் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும், துறைமுகத்தில் உள்ள பெட்ரோல் டேங்கருக்கு இன்னும் ​டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 மேலும் மின்வெட்டு தொடரும் எனவும், இன்று நாடு ஸ்தம்பித நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தலவாக்கலையில் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த ஆசிரின் மரண சடங்கில் மலையகத்தைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் கலந்து கொண்டார். 

மலையக அரசியல் களத்தில் சின்னத் தம்பி என அறியப்பட்ட இவர் மரண வீட்டுக்குச் சென்றதும் ஊடகவியலாளர்கள் இவரை கண்டு நெருங்கியுள்ளனர். 

உடனடியாக ஊடகங்கள் முன் தனது அரசியல் பேச்சை ஆரம்பித்த இந்த இராஜாங்க அமைச்சர்  வடக்கில் மீனவர்கள் பிரச்சினை தமிழ்நாடு விஜயம் என வசனங்களை அவிழ்த்துவிடத் தொடங்கினாராம். 

மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த ஆசிரியர் குறித்தும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசாமல் இருந்ததால் அருகில் இருந்தவர்கள்  ஆத்திரமடைந்து தங்களது பிரச்சினை பற்றி பேசுமாறு கூச்சலிட்டுள்ளதுடன் மீனவர் பிரச்சினை பேசுவதாயின் இங்கிருந்து செல்லுமாறும் கூச்சலிட்டுள்ளனர்.

இதனால் அங்கு சிறு பரபரப்பு ஏற்பட்ட நிலையில்  பொலிஸார் தலையிட்டு இராஜாங்க அமைச்சரவை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். 

மரண வீட்டு சோகத்தில் சுற்றி இருந்தவர்கள் சற்று மது அருந்தி இருந்ததையும் மறைப்பதற்கில்லை. 

இராஜாங்க அமைச்சர் அசிங்கப்பட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். 

இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை தினமும் (25) நாட்டில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, முன்னதாக வௌியிடப்பட்ட மின்வெட்டு அட்டவணைக்கமைய ஏ,பி,சி குழுக்களுக்கு சுழற்சி முறையில் 4.40 மணித்தியால மின்வெட்டு அமல்ப்படுத்தப்படவுள்ளது.

மேலும், ஏனைய குழுக்களுக்கு குறித்த காலப்பகுதியில் 5.15 மணித்தியால மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது.

 
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்திற்கு டோர்ச் லைட்டுடன் வருகை தந்தார். 
 
மின்வெட்டு ஏற்பட்டால் மலசலகூடத்திற்கு பயன்படுத்தக் கூடிய வகையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளுக்காக டோர்ச் லைட் கொண்டு வந்ததாக சபைக்கு அறிவித்தார்.
 
அதன் பின்னர், அமைச்சர் தினேஸ் குணவர்தன, இவ்வாறான உபகரணங்களால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும், எனவே அவையில் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் சபாநாயகரிடம் தெரிவித்துடன் இதனால் அமைச்சர் தினேஸ் குணவர்தனவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதனால் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை காரணமாக பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.