web log free
February 11, 2025
kumar

kumar

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கோட்டை நீதவான் திலின கமகேவின் இல்லத்திற்கு சென்று சரணடைந்தார்.

இதன்போது, அவரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு உத்தரவிட்ட நீதவான், வௌிநாட்டு பயணத் தடையையும் விதித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவிக்கும் திகதியில் வாக்குமூலமளிக்க வருகை தர வேண்டும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இரவு 8 மணிக்கு முன்னதாக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவரை கைது செய்வதற்காக கோட்டை நீதவான் பிறப்பித்த பிடியாணையை அவர் சரணடையும் வரை நடைமுறைப்படுத்த வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இறுதி தீர்ப்பொன்றை வழங்கும் வரை நீதிமன்றத்தில் ஆஜராகும் அவருக்கு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என கோட்டை நீதவானுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுமார் பத்து  உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவர்கள் பதவி விலகுவார்கள் . 

 

 

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஓடிடி தளம் ஒன்று ஒளிபரப்பு செய்ய இருப்பதால் திருமணத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஹோட்டலை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ரசிகர்கள், செய்தியாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் வாயிலில் இருக்கும் பாதுகாவலர்களிடம் டிஜிட்டல் அழைப்பிதழ் மூலம் தங்கள் மொபைல் போனில் வைத்திருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

செல்போன்களை ஒப்படைத்து விட்டு தான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு இருந்ததால் செல்போன்களை கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு உள்ளே சென்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காக விஜபிகளுக்கு முதலைப் பண்ணை வழியாக தனி நுழைவு வாயில் ஏற்படுத்தப்பட்டது. கடற்கரை ஓரமாக உள்ளூர் வாசிகள் நடந்து சென்றதை அனுமதிக்காததால் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ இன்று (09) காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன்படி இன்று அதிகாலை 03.15 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய்க்கு புறப்பட்ட அவர், அமெரிக்கா செல்ல உள்ளார்.

மாங்குளம் பிரதேசத்தில் 10 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞரொருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று(08) தீர்ப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தாம் இரு தடவைகள் குறித்த இளைஞரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமி சாட்சியமளித்துள்ளார். சிறுமியின் சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குற்றவாளியான இளைஞருக்கு 10 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 02 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவித்துள்ளார்.

20,000 ரூபா அபராதத்தையும் செலுத்த வேண்டும் என குற்றவாளிக்கு உத்தரவிடப்பட்டதுடன், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 02 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவருக்கே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017 மார்ச் மாதம் பாடசாலைக்கு சென்ற 10 வயதான சிறுமியை குறித்த இளைஞர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தனது இராஜினாமா கடிதத்தை கையளித்த பின்னர் பசில் ராஜபக்ஷ விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.

இதேவேளை, பசில் ராஜபக்ச பதவி விலகினாலும் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடர்வார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜயந்த கெட்டகொடவின் இராஜினாமாவை அடுத்து பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்ச பதவி விலகியதால் அந்த இடத்திற்கு கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார்.

பசில் ராஜபக்சவின் இராஜினாமாவை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் அது முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான முக்கிய அமைச்சுப் பதவி எனவும் அறியமுடிகிறது.

அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை தொடர்பான சட்டமூலத்தை நாளை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா குறித்து எந்த தொழிற்சங்கத்திடமும் கருத்து கேட்கவில்லை என்றும் அவர் கூறினார்.

நாளை காலை வரை இலங்கை முழுவதும் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் படிப்படியாக செயலிழந்துவிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புகளை மீறி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் வேலைநிறுத்தம் தொடரும் என்றும் அவர் கூறினார்.

அத்தியாவசிய சேவைகளுக்கு மின்சாரம் கிடைக்காது எனவும், அத்தியாவசிய சேவைகளுக்காக உள்ள ஜெனரேட்டர்கள் இதற்காக பயன்படுத்தப்படும் எனவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை மாலை கலந்துரையாடியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வதன் மூலம் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

பிரிட்ஜிங் நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை முடிப்பதை நம்பியிருப்பதாக பிரதமர் விளக்கினார்.

இந்த இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு ஆதரவளிக்க தனது விருப்பத்தை முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்தார்.

சபுகஸ்கந்த தனியார் நிறுவன வளாகத்தில் சட்டவிரோதமான முறையில் 3500 லீற்றர் டீசல் அடங்கிய எரிபொருள் பௌசரை மறைத்து வைத்திருந்த 50 வயதுடைய நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனஹேன முகாமில் STF குழுவினரால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக STF தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட டீசலின் மதிப்பு ரூ. 1.4 மில்லியன். காலியைச் சேர்ந்த சந்தேக நபர் சபுகஸ்கந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd