web log free
November 26, 2025
kumar

kumar

வடக்கு கிழக்கு மாகாணங்கள் நோக்கி இவ்வாறான `தாழ்முக்கம்` வருவது வரலாற்றில் முதல் முறையாக.

இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் இன்று இரவு ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றம் பெறும்.

இது நாளைய தினம்(26.11.2025) இலங்கையின் தென்பகுதியூடாக ( அம்பாந்தோட்டைக்கு அண்மையாக) வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கும்.

இந்த தாழமுக்கம் எதிர்வரும் 27.11.2025 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று அன்றைய தினம் அல்லது 28.11.2025 அன்று புயலாக மாற்றம் பெறும்.

இலங்கையின் காலநிலை வரலாற்றில் இரண்டு காற்றுச் சுழற்சிகள் ஒன்றாகி தென் பகுதியூடாக ஊடறுத்து கிழக்கு மற்றும் வடக்கு மாகாணத்தை நோக்கி வருவது இதுவே முதல் முறையாகும்.

வங்காள விரிகுடாவின் வரலாற்றிலும் மேற்கு நோக்கி நகர்ந்த காற்றுச் சுழற்சி மீண்டும் கிழக்கு நோக்கி நகர்ந்து இன்னுமொரு காற்றுச் சுழற்சியுடன் இணைந்து பலமடைவதும் இதுவே முதல் முறை.

இதனால் நாடு முழுவதும் மிகக் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. இந்தக் காற்றுச் சுழற்சியின் செல்வாக்கினுள் இலங்கை முழுவதும் உள்ளடங்கியுள்ளது.

ஒரு தாழ்வுநிலை/தாழமுக்கம்/ காற்றழுத்த தாழ்வு நிலை/ தாழ்வு மண்டலம்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்/ புயல்/ சூறாவளி/ சூப்பர் சூறாவளி எந்த திசை நோக்கி நகர்கின்றதோ அந்த பகுதியே அதன் காற்றுக் குவிப்பு மையமும் மழை வலயமும் ஆகும்.

அந்த வகையில் இந்த தாழமுக்கம் நகரும் போது இந்த காற்றுக் குவிப்பு மற்றும் மழை வலயத்தினுள் தென் மாகாணம், ஊவா மாகாணம்,

மிக முக்கியமாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் அடங்குகின்றன.

எனவே நாளை முதல் (26.11.2025)கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு கனமழை கிடைக்கத் தொடங்கும்.

எதிர்வரும் 27.11.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிகக் கனமழையும், வேகமான காற்று வீசுகையும் நிகழும்.

இந்த நிலைமை எதிர்வரும் 29.11.2025 வரை தொடரும்.

இந்த நாட்களில் அதாவது எதிர்வரும் 28.11.2025 முதல் 29.11.2025 வரை பல பகுதிகளில் திரட்டிய மழைவீழ்ச்சியாக 350 மி.மீ. க்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே இன்று கிடைத்துக் கொண்டிருக்கும் மழையினால் கிழக்கு மாகாணத்தின் கணிசமான பகுதிகள் வெள்ள பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

எனவே எதிர்வரும் நாட்களில் கிடைக்கும் கன மழையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் தீவிரமான வெள்ள நிகழ்வுகளை ஏற்படுத்தும்.

எதிர்வரும் நாட்கள் வானிலை ரீதியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிக நெருக்கடியான நாட்களாகும்.

ஆகவே பொதுமக்கள் இந்த எச்சரிக்கையை புறந்தள்ளாமல், போதுமான தயார்ப்படுத்தல் மற்றும் முன்னேற்பாடுகளை மேற் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கணிசமான அளவு தவிர்க்கலாம்.

புயல்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல காற்று வீசும்போது...

1. சகல இலத்திரனியல் பொருட்களினதும் மின் இணைப்பைத் துண்டித்து தகவல்களை அறிய தொலைபேசியை மட்டும் பயன்படுத்தி தகவல்களை அறிய வேண்டும்.

2. பாதுகாப்பான உறைவிடத்தின் உள்ளே இருக்கவும்.

3. பாதுகாப்பான இடம் தூரத்தில் உள்ளதாயின் முன்னரே சென்று போக்குவரத்து நெரிசல், வெள்ள அனர்த்தம், காற்றுப் பாதிப்பு என்பவற்றை தவிர்த்துக் கொள்ளவும்.

4. வீடு அல்லது குடிசை உடைய அல்லது சரிய ஆரம்பித்தால் மெத்தைகள் மற்றும் போர்வைகளுடன் உறுதியான கட்டில் அல்லது மேசைக்கு கீழே சென்று உங்களைப் பாதுகாக்கவும்.

5. புயலின் அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் கண்பகுதி தொடர்பாக அவதானத்துடன் இருத்தல் வேண்டும். காற்று வீழ்ச்சியடைந்ததும் சூறாவளி முடிவடைந்தது என முடிவெடுக்க வேண்டாம். வலிமையான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய காற்று வேறு திசையில் இருந்து வீசலாம். உத்தியோக பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கவும்.

6. வாகனம் செலுத்திக் கொண்டிருந்தால் வாகனத்தை நிறுத்தும்போது கடலுக்கு தூரமாகவும் மரங்கள், மின்கம்பங்கள், மின் கம்பிகள் இல்லாத இடத்தில் நிறுத்தவும் வாகனத்துள்ளே இருக்கலாம்.

புயல்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல காற்று வீசிய பின்...

1. பாதுகாப்பானது என அறிவிக்கும் வரை வெளியே செல்ல வேண்டாம்.

2. சமையல் வாயு வெளியேற்றத்தினைச் சரிபார்க்கவும். ஈரமாக இருப்பின் மின்சார சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்.

3. ஆலோசனைக்காகவும், எச்சரிக்கைக்காகவும் புதிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்

4. சேதமடைந்த மின்சார இணைப்புக்கள், பாலங்கள், கட்டிடங்கள், மரங்கள், தொடர்பாக அவதானத்துடன் இருங்கள். வெள்ளநீர்ப்பகுதிக்குள் செல்ல வேண்டாம்.

5. தேவையற்ற தொலைபேசி அழைப்புக்களைத் தவிருங்கள்.

வெள்ளப்பெருக்கு நிகழ்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய தயார்ப்படுத்தல் முறைகள்.

1. வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய இடங்களை அறிந்து வைத்திருத்தல்.

2. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலப்பகுதிகளில் பாதுகாப்பாக தங்குவதற்குரிய இடங்களை அறிந்து வைத்திருத்தல்.

3. முடிந்தால் உங்கள் பிரதேசங்களில் நாளை மாலைக்குள் இயற்கையான மற்றும் செயற்கையான வடிகால்களைத் துப்புரவாக்குதல்.

4. வெள்ளப்பாதிப்பின் அபாய அறிவிப்புக்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளல்.

5. வெள்ளப்பாதிப்புக் காலங்களில் பாதுகாப்பாக தங்கலாம் என்று அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு வெள்ளம் குறைவாக இருக்கும் போது சென்றடைதல் வேண்டும்.

6. அவசரகால பொதியை எடுப்பதுடன் மிக முக்கியமான ஆவணங்களை வெள்ளத்தினின்றும் பாதுகாத்தல்.

7. வெள்ள அமைத்துள்ள பகுதிகளில் உள்ள மக்கள் சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளை மிக விரைவாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லல்.

8. மின்சார, தெலைத் தொடர்பு இணைப்புக்களை துண்டித்தல்.

9. இடம்பெயர்ந்தோர் முறையான அறிவிப்பு வரும் வரை வீடுகளுக்கு திரும்பாமை.

10.தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதனால் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடித்தல்.

3. வெள்ள நீர்ப்பகுதிகளுக்கு செல்லாது இருத்தல்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, வரவிருக்கும் அனர்த்தத்தினால் எமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்ப்போம்.

குறிப்பு: மாதிரிகளின் அடிப்படையிலேயே இந்த முன்னறிவிப்பு வழங்கப்படுகின்றது. தீவிர வானிலை தொடர்பான இந்த முன்னறிவிப்புக்களில் சில மாற்றங்கள் நிகழலாம் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சுஜாதா அழகப்பெருமா தலைமையிலான குழு, சில ஊழியர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைகள் மூலம், நாடாளுமன்ற தகவல் அமைப்புகள் மற்றும் மேலாண்மைத் துறையின் அதிகாரி ஒருவருக்கு எதிராக பல்வேறு அநீதிகள் மற்றும் பாகுபாடுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சுஜாதா அழகப்பெருமா, இந்தக் குழுவின் அறிக்கையை சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவிடம் ஒப்படைத்தார்.

பாராளுமன்ற தகவல் அமைப்புகள் மற்றும் மேலாண்மைத் துறையின் அதிகாரி ஒருவர் தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து சபாநாயகர் இந்த வெளிப்புற விசாரணைக் குழுவை நியமித்தார்.

இந்தச் சம்பவத்தை விசாரிக்க முன்னர் இரண்டு உள் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், புகார்தாரர் இரு குழுக்களின் அதிகாரிகளாலும் நேர்காணல் செய்ய மறுத்ததால் வெளிப்புற விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.

இதற்கிடையில், வீட்டு பராமரிப்புத் துறையின் சில பெண் ஊழியர்களின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, வீட்டு பராமரிப்புத் துறையின் அதிகாரி உட்பட மூன்று பேர், நாடாளுமன்ற நிர்வாகத்தால் முன்னர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

நுகேகொட பேரணி ஒரு பெரிய தீயாக மாறியுள்ளது என்றும், அடுத்த பேரணியை தங்கள் சொந்த மாவட்டத்தில் நடத்த நாடு முழுவதிலுமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில கூறுகிறார்.

உதய கம்மன்பில கூறினார்,

"(21 ஆம் திகதி) நுகேகொடவில் நாங்கள் தொடங்கிய இந்த அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தின் நெருப்பு ஒரு பெரிய தீயாக மாறி, இந்த தாய்நாட்டின் எதிரிகள் அரச ஆட்சியிலிருந்து தப்பி ஓடும் வரை நாடு முழுவதும் பரவும் என்று இன்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

அடுத்த பேரணியை தங்கள் சொந்த மாவட்டத்தில், தங்கள் சொந்த மாகாணத்தில் நடத்த நாடு முழுவதிலுமிருந்து கோரிக்கைகள் உள்ளன. ஜனவரியில் இரண்டாவது பேரணியை நடத்த நாங்கள் நம்புகிறோம்."

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உதய கம்மன்பில இவ்வாறு கூறினார்.

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ICCPR சட்டத்தின் அடிப்படையில் கடந்த 2023/10/23 அன்று சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தனுக ரணஞ்சக தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

“வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்“ என்று மட்டக்களப்பில் உள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கூறியது தொடர்பாக, குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில் நீதிபதி விடுமுறையில் சென்றுள்ளமையால் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடனான அனைத்து நடவடிக்கைகளும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் மேற்கொள்ளப்படும் என்றும், எதிர்காலத்தில் இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மட்டத்தில் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களுக்காக இரு கட்சிகளின் கூட்டுப் பணிகளிலும் கவனம் செலுத்தப்படும் என்று பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது குறித்து கட்சி பிரதிநிதிகளுக்கு அறிவித்ததாக பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் ஒரு நபரின் சடலம் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, இந்த மண்சரிவு அனர்த்தத்தில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இந்த அனர்த்தத்தில் சிக்கியிருந்த நிலையில் காயமடைந்து மீட்கப்பட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் மீட்பு பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள பதியத்தலாவை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாக தோற்கடிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 07 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன.

தேசிய மக்கள் சக்தியின் ஏழு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், அதே நேரத்தில் சமகி ஜன பலவேகய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, சர்வ ஜன பலய மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

மாலத்தீவில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, இலங்கை தொழிலாளர்களை ஏமாற்றி, போலி விளம்பரங்களை வெளியிட்டு, நிதி மோசடி செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாலத்தீவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இந்த விஷயத்தை அதன் பணியகத்திற்கு புகாரளித்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த கடத்தல்காரர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக், லிங்க்டின் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, மாலத்தீவில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, பல்வேறு முறைகள் மூலம் மக்களை மாலத்தீவுக்கு அனுப்பி பணம் வசூலித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவுக்கு வந்த மக்களுக்கு ரூ.60,000-80,000 வரை மாத சம்பளத்துடன் கூடிய வேலைகளை வழங்குவதாக கடத்தல்காரர்கள் உறுதியளித்துள்ளதாகவும், அவர்கள் ரூ.350,000 முதல் ரூ.500,000 வரை கூடுதலாக பணம் பெற்றுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், மாலைதீவிலோ அல்லது வேறு இடங்களிலோ வசிக்கும் இலங்கை கடத்தல்காரர்கள் குழுவினால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இத்தகைய பிரச்சாரங்களுக்கு வேலை தேடுபவர்கள் இரையாக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

பணியகத்தின் உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலமாக மட்டுமே வேலை வாய்ப்புகளைத் தேடுவது முக்கியம் என்பதையும், சுயதொழில் மூலம் வேலை தேடுபவர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் அனைத்து தரப்பினரும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக, இன்று( 21) திட்டமிடப்பட்டுள்ள எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியின் ஏற்பாட்டாளர்கள், அந்தப் பகுதியில் அமைந்துள்ள உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு பொலிஸ் வலியுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில், நுகேகொடை பகுதியின் மையத்தில் அமைந்துள்ள அனுலா மகளிர் வித்தியாலயம், புனித ஜோன்ஸ் கல்லூரி, புனித ஜோசப் மகளிர் வித்தியாலயம், சமுத்ரா தேவி மகளிர் வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளில், திட்டமிடப்பட்ட பேரணி நடைபெறும் அதே நேரத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெறுவதாக பொலிஸ் அறிவித்துள்ளது.

Page 1 of 587
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd