ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான எரிபொருள் கையிருப்புகள் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்ரோலிய நிறுவனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்ததாவது,
அதன்படி, எரிபொருள் ஏற்றிய நான்கு கப்பல்கள்
இடையிலான காலப்பகுதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த அனைத்து கப்பல் சரக்குகளும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து வரவுள்ளதாகவும் கூறினார்.
இந்த எரிபொருள் கையிருப்புகள் நாட்டிற்கு வந்தடைந்த பின்னர், அந்நேரத்தில் நிலவும் சந்தை விலைகளின் அடிப்படையில் அவை கொள்முதல் செய்யப்படும் எனவும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகையின் மதிப்பு சுமார் 10 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் மற்றும் நவீன ஆயுதங்கள் கடத்தப்பட்ட இரண்டு பலநாள் மீன்பிடி படகுகள் இன்று (12) திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
கடற்படையின் நீண்டதூர தேடுதல் கப்பல்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு படகிலிருந்து சுமார் 600 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய ஹேரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், போதைப்பொருட்களுடன் அதே படகிலிருந்து 08 கைத்துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான மெகசின்கள் , 02 T56 ரக துப்பாக்கிகள், 01 M16 ரக துப்பாக்கி. ( M16 ரக துப்பாக்கியானது பாதுகாப்புப் படையின் விசேட பிரிவினரால் மாத்திரம் பயன்படுத்தப்படும் ஒரு நவீன ஆயுதமாகும்) ஆகிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மற்றைய பலநாள் மீன்பிடி படகு, போதைப்பொருள் கடத்தப்பட்ட படகிற்கு உதவியாகவும் உளவு பார்ப்பதற்காகவும் வந்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் நிலைமை காரணமாக இலங்கையின் எதிர்காலத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை அவர் சிரி மங்கள விகாரையில் புதிதாக கட்டப்பட்ட சைத்தியத்தின் கொத்துவை திறந்து வைத்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறினார்.
கேள்வி: தற்போதைய அரசு புத்தசாசனத்திற்கு வழங்கும் சேவை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: “ஏதாவது சேவை செய்கிறார்களா?”
கேள்வி: புத்தசாசனத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளி வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. உங்கள் ஆட்சிக் காலத்தில் அது எப்படி இருந்தது?
பதில்: “நாங்கள் அதை மிக உயர்ந்த இடத்தில் வைத்தோம். இப்போது அப்படிச் செய்கிறார்களா என்பது கேள்வி.”
கேள்வி: உங்கள் காலத்தில் பணியாற்றிய உளவுத்துறை அதிகாரி ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் வைத்துள்ளனர். அதைப் பற்றி உங்கள் கருத்து?
பதில்: “அவர் செய்த சேவையை பாராட்ட வேண்டும். சிறையில் அடைக்க வேண்டியது அல்ல. இது அப்படிப் செய்ய வேண்டிய காலம் அல்ல.”
கேள்வி: தற்போது சர்வதேச அளவில் போர் நிலைமை உள்ளது. இந்தப் போர் தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலத்திற்கு என்ன ஆகும்?
பதில்: “ஒரு பிரச்சினை உருவாகும். நாட்டுக்கும் நாட்டின் எதிர்காலத்துக்கும் பாதிப்பு ஏற்படும்.”
கேள்வி: நாட்டின் தற்போதைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: “அதை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. மக்களுக்கே என்ன நடக்கிறது என்பது எனக்குக் காட்டிலும் நன்றாக தெரியும்.”
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக கடந்த பெப்ரவரி 28 முதல் விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால், இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் வெளிநாட்டினருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அவர்களின் வீசா காலம் முடிவடைந்திருந்தாலும், எவ்விதக் கட்டணமுமின்றி 14 நாட்களுக்கு வீசா காலத்தை நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை
12.5 கிலோ 300 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.3,990
5 கிலோ 120 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.1,602,
2.3 கிலோ 56 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.750
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்களால் எழுந்துள்ள எரிசக்தி சவால்களைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்து, எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
இன்று (10) ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ராஜகருணா, தற்போதைய நிலைமை மிகவும் தீவிரமானது என்றும், உலகளாவிய நிலைமைகள் சீராகும் வரை நாட்டுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் எச்சரித்தார்.
"இது ஒரு சாதாரண சூழ்நிலை அல்ல; இது மிகவும் மோசமான நிலை" என்று அவர் கூறினார், பயணத்தை கட்டுப்படுத்துவதன் மூலமும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருளை வாங்குவதன் மூலமும், குறைந்த அளவிலான எரிபொருள் பயன்பாட்டை பேணுவதன் மூலமும் நெருக்கடியை நிர்வகிக்க கூட்டாக உதவுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் பீதியால் மக்கள் அதிகரித்த கொள்னவு எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு கொள்வனவாலும், எரிபொருளை பதுக்கி வைத்தல் காரணமாக , குறைந்த விலையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்பு திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே தீர்ந்துவிட்டதாகவும் , இதன் விளைவாக, எரிபொருள் விலை திருத்தத்தை விரைவுபடுத்த வேண்டியிருந்தது என்றும் தெரிவித்தார்.
இவ்வளவு பெரிய கொள்முதல் நடக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் இந்த மாத இறுதி வரை முன்னைய எரிபொருள் விலையை அதிகாரிகள் பராமரிக்க முடிந்திருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது நாட்டிற்கு வரும் எரிபொருள் கப்பல்களுக்கான கொடுப்பனவுகள், இறக்கும் நேரத்தில் நிலவும் ஐந்து நாள் சராசரி உலக சந்தை விலையின் அடிப்படையில் செய்யப்படுவதால், புதிதாக வழங்கப்படும் எரிபொருளின் விலை அதிகமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே நாட்டின் எரிபொருள் சேமிப்பு வசதிகள் குறைவாக இருப்பதாலும், அதிக அளவு அந்நியச் செலாவணி செலவிடப்படுவதாலும் , தற்போதைய நெருக்கடி நிலை தீரும் வரை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே எரிபொருளைப் பயன்படுத்துமாறும் , தேவையற்ற பயணங்களைக் கட்டுப்படுத்துமாறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வீதி விபத்துகள் சுமார் 50% அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட சுமார் 50% அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் போக்குவரத்து பிரிவு பிரதிபொலிஸ் மாஅதிபர் பி.ஜே சேனாதீர இந்த தகவலை வெளியிட்டார்.
இதனால் முக்கிய வீதிகளில் வாகனம் ஓட்டும் போது ஓட்டுநர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், வீதி விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
உலகளவில் கவனம் பெற்ற வெளிவிவகார அமைச்சர்களை உருவாக்கிய நாட்டில், இன்றைய வெளிவிவகார அமைச்சர் இலங்கையை சர்வதேச அரங்கில் நகைச்சுவையாக மாற்றி வருகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் குற்றம் சாட்டினார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற உலகளவில் மதிப்பைப் பெற்ற தலைவர்கள் இருந்த நாட்டில், தற்போதைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஒவ்வொருவருக்கும் செய்யக்கூடியதும் செய்ய முடியாததும் இருக்கின்றன. தன்னால் ஆங்கிலத்தில் பேச முடியாது என்பதை தானே பாராளுமன்றத்தில் வெளிப்படையாக கூறியதாகவும், ஆனால் தமிழில் பேசும் திறன் தன்னிடம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தகுதி இல்லாத சிலர் ஆட்சிக்கு வந்து தமக்கால் முடியாதவற்றையும் செய்ய முடியும் என்று நினைத்து உலக அரங்கில் நாட்டையே அவமானப்படுத்துகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இது இரண்டாவது முறை எனவும், இதற்கு முன்பு “மாத்தறை பிக் குச்சன்” என அழைக்கப்படும் ஒருவர் இதேபோல் நாட்டை அவமானப்படுத்தியதாகவும் அவர் கூறினார். எதிர்காலத்தில் அரசில் உள்ள அனைவரும் “பிக் குச்சன்” ஆக மாறக்கூடும் என்றும் அவர் விமர்சித்தார்.
இந்தக் கருத்துகளை அவர் Sri Lanka Freedom Party ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
ஓட்டோ டீசல் 22 ரூபாபவால் அதிகரித்து 303 ரூபாவாகவும்
சுப்பர் டீசல் 24 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 353 ரூபாவாகவும்
பெற்றோல் ஒக்டேன் 92, 24 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 317 ரூபாவாகவும்
பெற்றோல் ஒக்டேன் 95, 25 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 365 ரூபாவாகவும்
மண்ணெண்ணெய் 13 ரூபாவால் அதிகரித்து புதிய விலை 195 ரூபாவாகவும் விற்கப்படும்.
ஈஸ்டர் தாக்குதல் ஏதேனும் சதித் திட்டத்தின் விளைவாக நடந்ததா என்பதை ஆராய்வதற்காக இரண்டாவது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை சுமார் ஒரு ஆண்டுக்காலம் நடத்தப்பட்டு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் இராணுவ புலனாய்வு தலைவர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் படி, முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் இருந்திருக்கலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஆனந்த விஜேபால மேலும் வெளிப்படுத்தினார்.
அதேவேளை, சுரேஷ் சலே தற்போது ஒரு சந்தேக நபராக மட்டுமே கருதப்படுகிறார் என்றும் அவர் குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்பதை எதிர்காலத்தில் நீதிமன்றமே தீர்மானிக்கும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.