web log free
June 12, 2026
kumar

kumar

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எந்தவித அரசியல் தலையீடும் இடம்பெறக்கூடாது என்றும், சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசு மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி, விசாரணைகளுக்கு இடையூறு செய்யாமல் உண்மையான குற்றவாளிகளை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இந்த துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து தனது கட்சி ஆரம்பம் முதலே தெளிவான நிலைப்பாட்டில் இருந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குற்றவாளிகள் யார் என்பதை தீர்மானிப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு அல்ல என்றும், அதற்காக சுயாதீனமான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அந்த விசாரணை செயல்முறைக்கு எந்தவிதத்திலும் தடையாக இருக்க தனது கட்சி தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தை அரசியல் கருவியாக பயன்படுத்தாமல், முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அரசின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய அமெரிக்க ஐக்கிய குடியரசின் House Democracy Partnership (HDP) தூதுக்குழுவினருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய அமெரிக்க குடியரசின் House Democracy Partnership தூதுக்குழுவினர் இந்நாட்களில் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகப்பூர்வ விஜயத்திற்கு மத்தியில் இந்நாட்டின் முன்னணி அரசியல் பிரமுகர்கள் பலரை சந்தித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவருடனான இந்த சந்திப்பில் இரு தரப்பினரிடையேயான பாராளுமன்ற ஒத்துழைப்பு, ஜனநாயக ஆட்சி, சட்டவாக்க செயல்முறைகள் மற்றும் இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவிவரும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.

அத்துடன், அரச கொள்கை அபிவிருத்தியாக்கம் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சமகால அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் தொடர்பிலும் இரு தரப்பினரிடையே விரிவான கருத்துப் பரிமாற்றம் இங்கு இடம்பெற்றதோடு, இந்தச் சந்திப்பின் மூலம் இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையே ஜனநாயக ஒத்துழைப்பும் பரஸ்பர புரிந்துணர்வும் மேலும் வலுப்பெற்றன.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஐந்து (05) புனைப்பெயர்களைப் பயன்படுத்தியிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அந்தப் பெயர்களின் பின்னால் உள்ள உண்மையான நபர்கள் யார் என்பது விரைவில் நாட்டிற்கு வெளிப்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், இந்தப் புனைப்பெயர்களில் “சோனிக்” (Sonic) என்ற பெயர் குறித்து முன்னதாக நாடாளுமன்றத்தில்கூட விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், இதற்கு அப்பால் இன்னும் நான்கு புனைப்பெயர்கள் தொடர்பான தகவல்கள் விசாரணைக் குழுக்களிடம் இருப்பதாகவும், அவை தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுடன் தொடர்புடையவை என்பதால் மேலதிக விவரங்களை இந்நேரத்தில் வெளியிட முடியாது என்றும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வழங்கிய அரசியல் வாக்குறுதியின்படி, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டறிவதற்கான முறையான விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இடம்பெறாத வகையில் நியாயமான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.

இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியினர் பல்வேறு தடைகளை ஏற்படுத்த முயன்றாலும், சுயாதீன நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்தப் புலனாய்வுகள் எந்த நிலையிலும் நிறுத்தப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் புதிய விசாரணைத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், குறித்த புனைப்பெயர்களின் பின்னால் செயல்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் சுனில் வடகல மேலும் கூறினார்.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளையும், மறுநாளும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார அது தொடர்பான தகவலை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் ஒக்டேன் 95 பெற்றோல் 7 ஆயிரம் தொன் மற்றும் ஒக்டேன் 92 பெற்றோல் 29 ஆயிரம் தொன் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு இன்று (10) l எரிபொருள் தாங்கிக் கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

அதே போன்று நாளை (11) 29 ஆயிரம் மெற்றிக தொன் டீசல் ஏற்றிக் கொண்டு எரிபொருள் தாங்கிக் கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

குறித்த கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இதற்கிடையே 32 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் மற்றும் 7ஆயிரத்து 200 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் என்பன எரிபொருள் தாங்கிக் கப்பலொன்றில் இருந்து கொழும்புத் துறைமுகத்தில் இறக்கும் பணிகள் தற்போதைக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 4 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் செவ்வாய்க்கிழமை (09) தீர்ப்பளித்துள்ளார்.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, அவருக்கு 18 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரண குணவர்தன தேசிய லோத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்தச் சபைக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்ததில் அரசாங்கத்திற்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கின் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் பிரதிவாதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் நீதிமன்ற நீதிபதி ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா நான்கு ஆண்டுகள் வீதம் கடுழியச் சிறைத்தண்டனை விதித்தார்.

எனினும், இந்தத் தண்டனைகளை ஏககாலத்தில் (ஒரே காலப்பகுதியில்) அனுபவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதற்கமைய, அவர் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

 

 

சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (08) அவரது குடும்பத்தினரும் சட்டத்தரணியும் அவரைச் சந்திக்க அனுமதி பெற்றிருந்ததாகவும், அப்போது தாம் உண்ணாவிரதத்தை இடையறாது தொடரப்போவதாக சலே தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தனது விவகாரம் தொடர்பான விசாரணைகளில் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளரை நீக்க வேண்டும் என்றும், தன்னைத் தடுத்து வைத்திருக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் உண்ணாவிரதத்தை தொடருவேன் என்றும் அவர் கூறியுள்ளதாக அறியப்படுகிறது.

இதற்கிடையில், சுரேஷ் சலேவுக்கு மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான முறையில் நடத்தப்படுவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ள சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு முழுவதும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டத்தில் கலந்து கொண்ட உதய கம்மன்பில எந்தவித தடைகள் ஏற்பட்டாலும் இந்தப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை அனுராத யகம்பத், சுரேஷ் சலே விடுவிக்கப்படும் வரை இந்த சத்தியாகிரகப் போராட்டம் தொடரும் என்றும், இது போர்வீரர்களுக்கு செய்யப்படும் அநீதியாகும் என்றும் கூறியுள்ளார்.

தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவலில் உள்ள முன்னாள் புலனாய்வுத் துறைத் தலைவர் சுரேஷ் சாலே குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சாலே ஒரு தொழில்முறை இராணுவ அதிகாரியாக அல்லாமல், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கட்டளைகளை நிறைவேற்றிய ஒருவராக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.

சுரேஷ் சாலே மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் கோட்டாபய ராஜபக்சவின் அறிவும் அனுமதியும் உடனேயே நடந்ததாகவும், அவரின் அனுமதியின்றி சாலே எதையும் செய்யவில்லை என்றும் பொன்சேகா தெரிவித்தார்.

மேலும், சாலேவை “மூளையின் பின்பகுதி” என்றும், கோட்டாபய ராஜபக்சவை “அதன் தலை” என்றும் குறிப்பிடிய அவர், மற்ற ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களும் இந்த நடவடிக்கைகள் குறித்து அறிந்திருந்ததாக கூறினார்.

அதேவேளை, சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட குழுவினருடன் சுரேஷ் சாலே நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் பொன்சேகா குற்றம்சாட்டினார்.

போருக்குப் பின்னரான காலகட்டத்தில் சஹ்ரான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு சம்பளம் வழங்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் ராஜபக்ச தரப்பின் ஆதரவுடன் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

தன்னை எட்டு மாதங்கள் எந்த குற்றச்சாட்டும் வழக்கும் இன்றி கைது செய்து தடுத்து வைத்து துன்புறுத்துமாறு கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கியவர்களில் சுரேஷ் சாலேயும் ஒருவர் எனவும் பொன்சேகா நினைவுகூர்ந்தார்.

மேலும், தனது மனைவி மற்றும் மகள்களும் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், விமான நிலையங்களில் கூட அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டதாக கூறப்படும் அந்த அநீதிகளுக்காக, இன்று சுரேஷ் சாலே எதிர்கொண்டு வரும் நிலை “செய்த கர்மத்தின் விளைவு” எனக் குறிப்பிட்ட பொன்சேகா, “இப்போது சாலே போன்றோரின் நேரம் வந்துவிட்டது” என்றும் தெரிவித்தார்.

Page 1 of 648
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd