web log free
April 19, 2026
kumar

kumar

முன்னாள் மின்சார மற்றும் ஆற்றல் அமைச்சர் குமார ஜயகொடி மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னிட்டு, முழு அமைச்சரவை உடனடியாக பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. டொலவத்த வலியுறுத்தியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், குறித்த ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவரும் வரை, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது நெருங்கிய நண்பரான குமார ஜயகொடியை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசு நிலக்கரி டெண்டரை பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேராவுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது என நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அரசின் “ஆத்மீக தலைவர்” தம்மிக்க பெரேரா என்பதுடன், அரசை இயக்குவது அவரே என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் நிலவுகின்றதாகவும் அவர் கூறினார்.

தம்மிக்க பெரேராவை உட்பட தொழிலதிபர் உலகத்துடன் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) நீண்டகாலமாக தொடர்பில் இருந்ததாகவும், அந்தக் கட்சி அவர்களது நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை அமைத்து கூட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்ததாகவும் நிர்மால் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டார்.

அதேவேளை, ஜே.வி.பி தொழிற்சங்கங்கள் அந்த நிறுவனங்களில் மிக அரிதாகவே தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதற்குப் பதிலாக அந்த நிறுவனங்கள் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தொழிற்சங்க நிதிகளுக்கு ஆதரவு வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கருத்துகளை அவர் தனது YouTube சேனலில் வெளியிட்ட வீடியோ ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார்.

நாட்டின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகளை மூடி மறைக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளைத் தோற்கடிக்க ஒன்றிணைந்து செயற்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தரமற்ற நிலக்கரியை டெண்டர் மூலம் கொள்வனவு செய்ததில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.


ஆரம்பத்தில் இந்த மோசடிகளை நிராகரித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதனை மறைக்க தீவிரமாக முயற்சிக்கின்றது. எனினும், நிலக்கரி நிறுவனத்தின் முன்னாள் தலைவரின் அறிக்கை, பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தரவுகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அறிக்கைகள் மூலம் இந்த ஊழல் அம்பலமாகியுள்ளது. குறிப்பாக, கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை ஊடாக நாட்டிற்கு ஏற்பட்ட நிதி நட்டம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நிலக்கரி அவசர கொள்முதல் தொடர்பான அண்மைய ஒலிப்பதிவு இந்த மோசடியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த ஒலிப்பதிவு உண்மையானது என நிலக்கரி நிறுவனத் தலைவரே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கும் நிலக்கரி கொள்முதலுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாடு செய்துள்ளது.


பிரபல தொழிலதிபர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்க தரப்பினருக்கும் இடையிலான இரகசிய கொடுக்கல் வாங்கல்களின் ஒரு பகுதியே இந்த நிலக்கரி ஊழல் என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் பதவியிலிருந்து விலகுவதன் மூலம் பில்லியன் கணக்கான நட்டத்தை மக்கள் மனதிலிருந்து மறைக்க அரசாங்கம் நாடகமாடுவதாகவும் அவர் சாடியுள்ளார்.


இந்த ஊழலுக்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரும், அமைச்சரவையின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியும் முழு அமைச்சரவையும் கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடியைப் பாதுகாப்பதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் 153 பிரதிநிதிகளும் மக்கள் நம்பிக்கையை உடைத்தெறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்களின் வரிப்பணத்திற்கு ஏற்படுத்திய நட்டத்திற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசாங்கத்தின் ஊழல் செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 8 வங்கி கணக்குகளில் சுமார் 93 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வாய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பில் CID யில் நேற்று (16) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுஜன முன்னணி கட்சியின் செயற்பாட்டாளரான பசன் கஸ்தூரி என்பவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிந்தவை இலக்குவைத்து போலி பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முறைபாட்டில் தெரிவித்து, பெருந்தொகை பணம் இருப்பதாக திட்டமிட்ட அடிப்படையில் இந்த பொய் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படுவது தெளிவாக தெரிகின்றது எனவும் சமூக ஊடக கணக்குகளை அவதானித்தாலும் அவற்றில் இடப்படும் பதிவுகளை அவதானித்தாலும் இது வெளிப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சுச் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் தத்தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

தமது இராஜினாமா கடிதங்களை அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.

வீதிகளில் அதிகப்படியான கரும்புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிய மோட்டார் வாகனப் பரிசோதகர்களுடன் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்போது வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், தேவைப்படும் பட்சத்தில் அவ்வாறான வாகனங்களை பொலிஸார் பொறுப்பேற்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொது வீதிகளில் கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குவதற்கு விசேட பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்கள் அத்தகைய வாகனங்களின் இலக்கத் தகடுகள் அல்லது காணொலி ஆதாரங்களை 070 3500525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தரநிலைப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு முறையான பதிவு எண்கள் வழங்கும் திட்டம் முழுமையாகச் செயற்படுத்தப்படாத சூழலைப் பயன்படுத்தி, சில கடத்தல்காரர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனைத் தடுக்கும் நோக்கில், தரப்படுத்தப்பட்ட இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு மோட்டார் வாகன ஆணையாளருக்கு, பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக, டபிள்யூ.பி.ஜே. சேனதீர மேலும் தெரிவித்தார்.தற்போது பல வாகன உரிமையாளர்கள் வெவ்வேறு வண்ணங்கள், எழுத்துருக்கள் (Fonts) மற்றும் இலச்சினைகள் அடங்கிய அலங்கார இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.இத்தகைய நடைமுறையை ஒழுங்குபடுத்தவும், வீதிப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாகச் செயற்படுவோரைக் கண்டறியவும் நாடு முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் வருகிற 20ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கல்விக்காலம் ஜூலை 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி முதல் ஒன்பது நாட்கள் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் சூழ்நிலையின்போதிலும் நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி தொடரும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உலக சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக எரிபொருள் விலையில் ஒரு அளவு உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

ஆனால், முழுமையான விலை உயர்வு செய்யப்படமாட்டாது என்றும், அதில் குறிப்பிடத்தக்க பகுதியை அரசுக் கோஷ்டி (Treasury) ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள எரிபொருள் விலைகள், போர் நிலைமை சீரடைந்த பின்னர் முடிந்தவரை விரைவில் குறைக்கப்படும் என்பது அரசின் எதிர்பார்ப்பாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மகாவலி ஆற்றின் வெருகல் பாலத்திற்கு அருகில் புத்தாண்டு நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் முழ்கிய மூவரின் சடலங்கள் பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தந்தை மற்றும் அவரது நான்கு மகன்கள் 14ம் திகதி பிற்பகல் ஆற்றில் நீராடச் சென்றபோது தந்தை நீரில் மூழ்கியுள்ளார். அவரைக்காப்பாற்ற அவருடைய நான்கு மகன்களும் ஆற்றின் ஆழத்திற்குள் சென்றிருந்த வேளையில் தந்தையும் ஒரு மகனும் உயிர் தப்பிய நிலையில், மற்றைய மூன்று மகன்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

அவ்வாறு காணாமல் போனவர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த நான்கு மகன்களும் சித்திரை புத்தாண்டுக்காகத் தமது சொந்த ஊருக்கு திரும்பியிருந்தபோதே புத்தாண்டை முன்னிட்டு குடும்பத்தோடு ஆற்றில் குளிக்கச் சென்றிருந்த வேளையே இச்சம்பவம் நடைபெற்றது.

குறித்த காணாமல் போனவர்களை காப்பாற்ற கடற்படையிடம் உதவி கேட்டும் "முதலைகள் இருப்பதாகக் கூறி கடற்படையினர் ஆற்றில் இறங்க மறுத்துத் திரும்பிச் சென்றுவிட்டனர்" என்று அங்கிருந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தையைக் காப்பாற்ற ஆற்றில் குதித்து காணாமல் போன மூன்று சகோதரர்களில், இருவரின் உடல்களைப் பின்னர் பிரதேசவாசிகளே கண்டுபிடித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் சோமாவதிய வனப்பகுதிக்கு உட்பட்ட மஹாவலி ஆற்றில் நேற்று ஏப்ரல் 14 மாலை நிகழ்ந்துள்ளது, சம்பவத்தை தொடர்ந்து குறித்த பிரதேசமே சோக மயமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Page 1 of 633
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd