web log free
June 14, 2026
kumar

kumar

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான 'மோதர நிபுண' என்பவரின் சகோதரர் மற்றும் 'புளூமெண்டல் சங்கா' ஆகிய இரு குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (13) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டனர்.

இலங்கையிலிருந்து தப்பியோடி அபுதாபியில் மறைந்திருந்த இவர்கள், மத்திய கிழக்கு போரின் போது ஈரான் தாக்குதல்களுக்குப் பயன்படுத்திய ட்ரோன் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தங்களது கைபேசிகளில் வைத்திருந்த குற்றத்திற்காக அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அதன் பின்னரே அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடம் விரிவான வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், 'மோதர சத்துர' கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதேபோல், 'புளூமெண்டல் சங்கா' என்பவரிடம் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து வைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் புஜித் ஜயசுந்தர மீதான வழக்கின் தீர்ப்பு கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை ஜூலை 31 அறிவிக்கவுள்ளது

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எந்தவித அரசியல் தலையீடும் இடம்பெறக்கூடாது என்றும், சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசு மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி, விசாரணைகளுக்கு இடையூறு செய்யாமல் உண்மையான குற்றவாளிகளை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இந்த துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து தனது கட்சி ஆரம்பம் முதலே தெளிவான நிலைப்பாட்டில் இருந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குற்றவாளிகள் யார் என்பதை தீர்மானிப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு அல்ல என்றும், அதற்காக சுயாதீனமான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அந்த விசாரணை செயல்முறைக்கு எந்தவிதத்திலும் தடையாக இருக்க தனது கட்சி தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தை அரசியல் கருவியாக பயன்படுத்தாமல், முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அரசின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய அமெரிக்க ஐக்கிய குடியரசின் House Democracy Partnership (HDP) தூதுக்குழுவினருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய அமெரிக்க குடியரசின் House Democracy Partnership தூதுக்குழுவினர் இந்நாட்களில் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகப்பூர்வ விஜயத்திற்கு மத்தியில் இந்நாட்டின் முன்னணி அரசியல் பிரமுகர்கள் பலரை சந்தித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவருடனான இந்த சந்திப்பில் இரு தரப்பினரிடையேயான பாராளுமன்ற ஒத்துழைப்பு, ஜனநாயக ஆட்சி, சட்டவாக்க செயல்முறைகள் மற்றும் இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவிவரும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.

அத்துடன், அரச கொள்கை அபிவிருத்தியாக்கம் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சமகால அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் தொடர்பிலும் இரு தரப்பினரிடையே விரிவான கருத்துப் பரிமாற்றம் இங்கு இடம்பெற்றதோடு, இந்தச் சந்திப்பின் மூலம் இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையே ஜனநாயக ஒத்துழைப்பும் பரஸ்பர புரிந்துணர்வும் மேலும் வலுப்பெற்றன.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஐந்து (05) புனைப்பெயர்களைப் பயன்படுத்தியிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அந்தப் பெயர்களின் பின்னால் உள்ள உண்மையான நபர்கள் யார் என்பது விரைவில் நாட்டிற்கு வெளிப்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், இந்தப் புனைப்பெயர்களில் “சோனிக்” (Sonic) என்ற பெயர் குறித்து முன்னதாக நாடாளுமன்றத்தில்கூட விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், இதற்கு அப்பால் இன்னும் நான்கு புனைப்பெயர்கள் தொடர்பான தகவல்கள் விசாரணைக் குழுக்களிடம் இருப்பதாகவும், அவை தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுடன் தொடர்புடையவை என்பதால் மேலதிக விவரங்களை இந்நேரத்தில் வெளியிட முடியாது என்றும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வழங்கிய அரசியல் வாக்குறுதியின்படி, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டறிவதற்கான முறையான விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இடம்பெறாத வகையில் நியாயமான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.

இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியினர் பல்வேறு தடைகளை ஏற்படுத்த முயன்றாலும், சுயாதீன நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்தப் புலனாய்வுகள் எந்த நிலையிலும் நிறுத்தப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் புதிய விசாரணைத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், குறித்த புனைப்பெயர்களின் பின்னால் செயல்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் சுனில் வடகல மேலும் கூறினார்.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளையும், மறுநாளும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார அது தொடர்பான தகவலை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் ஒக்டேன் 95 பெற்றோல் 7 ஆயிரம் தொன் மற்றும் ஒக்டேன் 92 பெற்றோல் 29 ஆயிரம் தொன் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு இன்று (10) l எரிபொருள் தாங்கிக் கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

அதே போன்று நாளை (11) 29 ஆயிரம் மெற்றிக தொன் டீசல் ஏற்றிக் கொண்டு எரிபொருள் தாங்கிக் கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

குறித்த கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இதற்கிடையே 32 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் மற்றும் 7ஆயிரத்து 200 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் என்பன எரிபொருள் தாங்கிக் கப்பலொன்றில் இருந்து கொழும்புத் துறைமுகத்தில் இறக்கும் பணிகள் தற்போதைக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 4 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் செவ்வாய்க்கிழமை (09) தீர்ப்பளித்துள்ளார்.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, அவருக்கு 18 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரண குணவர்தன தேசிய லோத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்தச் சபைக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்ததில் அரசாங்கத்திற்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கின் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் பிரதிவாதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் நீதிமன்ற நீதிபதி ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா நான்கு ஆண்டுகள் வீதம் கடுழியச் சிறைத்தண்டனை விதித்தார்.

எனினும், இந்தத் தண்டனைகளை ஏககாலத்தில் (ஒரே காலப்பகுதியில்) அனுபவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதற்கமைய, அவர் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

 

Page 1 of 648
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd