இன்று (29) இலங்கையின் பல பகுதிகளில் காற்றுத் தரம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட சில மாவட்டங்களில் காற்றுத் தரம் உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு தீங்கான நிலையை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களை இணையவழியில் பதிவு செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, இன்று முதல் இச்சேவைகள் இணையவழியில் முன்னெடுக்கப்படும் என தொழிலாளர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று முற்பகல் 9.00 மணிக்கு தொழிலாளர் அமைச்சின் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
சமீபத்தில், மாதிவெல எம்பிகளின் அதிகாரப்பூர்வ இல்லங்களில் குளிரூட்டி (Air Conditioning) வசதியை விரைவில் ஏற்படுத்துமாறு எம்பிக்கள் குழு நாடாளுமன்ற தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊடகங்களின் தகவல்படி, கடுமையான நிதி சிரமங்கள் காரணமாக, இந்த ஆண்டில் அதற்கான நடவடிக்கை எடுக்க இயலாத நிலையில், அடுத்த ஆண்டில் இதை பரிசீலிக்கப்போகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிவெல் எம்பி இல்ல வளாகத்தில் சுமார் 112 வீடுகள் உள்ளன. இதில் வசிப்பவர்கள் 70க்கும் மேற்பட்டோர் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியைச் சேர்ந்த எம்பிகள் என தகவல் தெரிவிக்கிறது.
இவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், தற்போது வீடுகளின் டைல் போடுதல் மற்றும் ஜன்னல் வலைகள் நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த அரசாங்க காலத்தில், சில எம்பிகள் தங்களது தனிப்பட்ட செலவில் குளிரூட்டி இயந்திரங்களை எம்பி இல்லங்களில் நிறுவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு விமர்சனத்தையும் ஏற்கத் தயாராக இருந்தாலும், திட்டமிட்டு பரப்பப்படும் போலி செய்திகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என ஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர், “எந்த விதத்திலும் ஊடக ஒடுக்குமுறை இல்லை. சமூக ஊடகங்கள், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களுக்கு எங்களை விமர்சிக்கவும், எங்கள் பலவீனங்களை சுட்டிக்காட்டவும் முழுமையான சுதந்திரம் உள்ளது. ஆனால், சில ஊடக நிறுவனங்களும் சமூக ஊடக குழுக்களும் திட்டமிட்ட வகையில் போலி செய்திகளை பரப்புவதுதான் பிரச்சினையாக உள்ளது” என தெரிவித்தார்.
மேலும், சுகாதாரத் துறை மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற மிகவும் உணர்வுபூர்வமான துறைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவது மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். சமீபத்திய அனர்த்த நிலைமைகளில் இருந்து நாடு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கி தேசிய நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் இத்தகைய தகவல்களை உருவாக்குவது வெறும் விமர்சனமாகக் கருத முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“நடப்பிலுள்ள சட்ட கட்டமைப்புக்குள் செயல்பட அரசாங்கம் உறுதியாக உள்ளது. போலி செய்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் எங்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர். இவ்வாறான தவறான பிரசாரங்களை கட்டுப்படுத்தி நாட்டின் நிலைத்தன்மையை பாதுகாப்பதற்காகத்தான் மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர்” என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சமீப நாட்களில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் குறித்து மக்களுக்கு தகவல் வழங்கிய நபர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை தண்டிக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இடையில் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸ் அதிகாரியை தாக்கியதாகவும், இருப்பினும் இதுவரை அந்த உறுப்பினர் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலாக, அந்த சம்பவம் தொடர்பான தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்திய ஊடக நிறுவனங்களை ஒடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், சமீபத்தில் ஆளும் தரப்பைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சா பயிரிட்டிருந்ததாகவும், அதனை கைப்பற்ற சென்ற பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்டதாகவும் கூறினார். அந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினரும், கஞ்சா தொடர்புடைய நபர்களும் வெளியில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“அடிபட்டவர் சிறையில், அடித்தவர் வெளியில். கஞ்சாவுக்கு உரியவரும் வெளியில். கைது செய்ய முயன்ற அதிகாரி சிறையில். தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் வெளியில் இருக்கிறார்” என அவர் விமர்சித்தார்.
இவ்வாறான சம்பவங்களை நாட்டுக்கும் உலகுக்கும் தெரியப்படுத்தியதற்காக ஊடக நிறுவனங்களை ஒடுக்க இந்த அரசாங்கம் முயற்சி செய்கிறது என்றும், பொலிஸ் திணைக்களத்தின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் மா அதிபர் அல்லது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதுகுறித்து உரிய முறையில் தலையிடவில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.
பொதுமக்களின் வாழ்வுச் செலவைக் குறைக்கும் நோக்கில், பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி,
பாஸ்மதி அரிசி ஒரு கிலோ ரூ.625 ஆகவும்,
வெள்ளை நாடு அரிசி ஒரு கிலோ ரூ.218 ஆகவும்,
சிவப்பு கைக்குளு அரிசி ஒரு கிலோ ரூ.206 ஆகவும்,
வெள்ளை கைக்குளு அரிசி ஒரு கிலோ ரூ.204 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
சிவப்பு பருப்பு ஒரு கிலோ ரூ.258,
டின் மீன் (425 கிராம்) ரூ.450,
உலர் மிளகாய் ஒரு கிலோ ரூ.895,
பச்சை பயறு ஒரு கிலோ ரூ.645,
நாட்டுக் கஜூ ஒரு கிலோ ரூ.1,150,
சிவப்பு கௌபி ஒரு கிலோ ரூ.920,
கோதுமை மாவு (பான் பிட்டி) ஒரு கிலோ ரூ.153,
வெள்ளை வெங்காயம் ஒரு கிலோ ரூ.450,
கடலை ஒரு கிலோ ரூ.410,
கொத்தமல்லி ஒரு கிலோ ரூ.370,
கடலை பருப்பு ஒரு கிலோ ரூ.190,
இறக்குமதி செய்யப்பட்ட உலர் மீன் (நெத்திலி) ஒரு கிலோ ரூ.850 ஆக விற்பனை செய்யப்படும்.
இந்த விலைக் குறைப்புகள் நாடு முழுவதும் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்களில் அமல்படுத்தப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்று பிற்பகல் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டார்.
2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதூஷிடம் இருந்து மீட்கப்பட்ட அந்தத் துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்தபோது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து தெளிவுபடுத்தத் தவறியமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்பட்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதுடன், இந்த ஆட்சியால் நாட்டை சரியாக நிர்வகிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது என, சமகி ஜன பலவேக (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார தெரிவித்தார்.
கடந்த ஆண்டு “159 மலர் செடிகள்” போல இருந்த குழு, தற்போது எந்த பயனும் இல்லாத காட்டுச் செடிகள், மூட செடிகள், லாடப்பா செடிகள் மற்றும் முள்ளுக் காடுகள் போல வளர்ந்துள்ளன என்றும் அவர் விமர்சித்தார்.
தற்போதைய அமைச்சரவை எந்தத் தொலைநோக்கும் திறனும் இல்லாத, செயலற்ற குழுவாக இருப்பதால், அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொண்டு, அந்த 159 பேரில் நாட்டை முன்னேற்றக்கூடிய ஒரே ஒரு பயனுள்ள செடியாவது உள்ளதா என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் நலீன் பண்டார தெரிவித்தார்.
ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
ஒரே ஆண்டுக்குள் ரூ.50,000 கோடியை சேமித்து, பேரிடர் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பகிர்ந்தளித்த ஒரே அரசு தற்போதைய அரசே என பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர திசாநாயக்க நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டிருப்பதைப் போலவே, அனைத்து அரச ஊழியர்களும் அதே நோக்கத்துடன் செயல்படுவதால், அந்த இலக்கை நிச்சயமாக நனவாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போதைய அரசு மிகுந்த வலிமை கொண்டது என்றும், அந்த அரசை எந்தவிதத்திலும் மாற்ற முடியாது என்றும் பிரதி அமைச்சர் டி.பி. சரத் வலியுறுத்தினார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிகமாக விசாரிப்பதற்காக 72 மணி நேர தடுத்து வைக்கும் உத்தரவை குற்றப் புலனாய்வுத் துறை (CID) பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு துப்பாக்கி மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையின் கீழ், டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.
பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்ததாவது, இந்த வழக்கு, டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு பிஸ்டல் (கைத்துப்பாக்கி) பின்னர் பாதாள உலக குற்றவாளியான மாகந்துரே மதுஷின் வசத்தில் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்புடையதாகும்.
புகழ்பெற்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷ், துபாயிலிருந்து இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்ட பின்னர், 2020 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டின் போது உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.