web log free
July 27, 2024
kumar

kumar

வெலிபென்னையில் நபரொருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை மாகொல புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீதியில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குறித்த குழுவினர் உயிரிழந்த நபரை தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதசாரிகளுக்கு ஆபத்தான வகையில் மோட்டார் சைக்கிள்களை அஜாக்கிரதையாக ஓட்ட வேண்டாம் என குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம்பெண்களை எச்சரித்ததாகவும் அதன்பிறகு ஏற்பட்ட வாக்குவாததில் ஒரு குழந்தையின் தந்தையான வாலிபர் தாக்கபட்டமயும் ,சந்தேகநபர்கள் பாடசாலை ஒன்றின் தரம் 11 மாணவர்கள் எனவும், அதில் உயிரிழந்தவரின் மனைவி ஆசிரியை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர் வேலையில்லாமல் இருந்ததாகவும், வேலைக்காக வெளிநாடு செல்வதற்காக காத்திருந்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பான வாக்குச் சீட்டுகள் இன்று அல்லது நாளை கிடைக்கப் பெற்றால், தற்போது திட்டமிட்டபடி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகளை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு நாட்களுக்குள் வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தபால் மூல வாக்களிக்கும் திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி தொடர்வது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

குருணாகல் நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றுக்குள் வைத்து 40 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சந்தேக நபர் திருகோணமலை கடற்படை முகாமில் பணிபுரிந்து வருகிறார்.

குறித்த பெண் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் பொத்துஹெர பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸ் குழுவொன்று மல்பிட்டிய பிரதேசத்தில் பஸ்ஸை நிறுத்தி சந்தேக நபரான சிப்பாயை கைது செய்தது.

லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, பின்வரும் பொருட்களின் விலை குறைப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வருகிறது.

ஒரு கிலோ உருளைக்கிழங்கு 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 375 ரூபாவாகும்.

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 149 ரூபாவாகும்.

இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோ 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 198 ரூபாவாகும்.

ஒரு கிலோ சிவப்பு பருப்பும் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

ஒரு கிலோ உள்ளூர் சிவப்பு பச்சரிசி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 164 ரூபாவாகும்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளை பச்சரிரி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 179 ரூபாவாகும்.

மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை 10% ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.

2023 ஆம் கல்வியாண்டுக்குரிய பாடப்புத்தகங்களை எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

மஹரகம பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றி உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதற்கமைய, ஆரம்ப வகுப்பு மற்றும் 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களை பகிர்ந்தளிக்க முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், வருடாந்தம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 4.5 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், இந்த வருடம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையினால் 45 வீதமான பாட புத்தகங்கள் அரச அச்சகத்திலும், 55 வீதமான பாடப்புத்தகங்கள் தனியார் அச்சகங்களிலும் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஓராண்டுக்கும் மேலாக தொடரும் தினசரி மின்வெட்டு நிறுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின்கட்டண உயர்வுடன் மின்தேவை குறையும் என்பதை அடிப்படையாக வைத்து இந்த முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கம்பளை ATM இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களில் நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கம்பளை மற்றும் புத்தளத்தில் இருந்து தலா இரண்டு சந்தேகநபர்களும், கலஹா பிரதேசத்தில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் கம்பளையில் உள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து ATM இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளதாகவும், அதில் இருந்த ரூ. 7.6 மில்லியன் ரொக்க பணம் மீட்கப்பட்டு அந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் பள்ளத்தில் ஏடிஎம் இயந்திரத்தை கைப்பற்றினர்.

ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்த போலீசார், மேலும் ரூ. 1.7 மில்லியன் ரொக்கம், ஒரு வேன், மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், இரண்டு சலவை இயந்திரங்கள், மூன்று கைத்தொலைபேசிகள் மற்றும் எரிவாயு குக்கர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மேலும் பல பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாகவும், பல்வேறு நபர்களுடன் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அரச எதிர்ப்புப் போராட்டத்தின் போது புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வீட்டில் இருந்து திருடப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும் சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொள்வதற்கு அந்தக் குழுவினர் குறித்த துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கம்பளை பிரதேசத்தில் உள்ள அரச வங்கியொன்றிலும், இரண்டு தங்க நகைக் கடைகளிலும் இதற்கு முன்னரும் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் இந்தக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ தெரிவித்தார்.

சந்தேகநபர்களுடன் தொடர்புடைய அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசா விண்ணப்ப மையம் நேற்று இரவு பதிவான பாதுகாப்பு சம்பவம் காரணமாக மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அனைத்து விண்ணப்பதாரர்களும் ஐவிஎஸ் பிரைவேட் லிமிடெட் உடனான தங்கள் பதிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

விசா விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அவசர தூதரகம் அல்லது விசா விஷயத்திற்கு உயர் ஸ்தானிகராலயத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், நேற்றிரவு இந்திய விசா விண்ணப்ப மைய வளாகம் உடைக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனுக்கு யாழ்.நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  அனுப்பப்பட்ட ஆவணம் சிங்கள மொழியில் இருப்பதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நேற்று (14) பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

நேற்று 20ஆம் திகதி யாழ்.நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கும் ஆவணத்தை கையளிப்பதற்காக எம்.பி.யை பொலிஸ் அதிகாரிகள் சந்தித்த போது, ​​உரிய ஆவணம் சிங்களத்தில் இருப்பதால் சிங்களம் வாசிக்க முடியாது என பொலிஸாரிடம் தெரிவித்தார்.

பின்னர், பொலிஸ் அதிகாரிகள் அதனை மொழிபெயர்த்து பாராளுமன்ற உறுப்பினரிடம் கொடுத்த போது, ​​பொலிஸாரால் நீதிமன்ற அழைப்பாணை, நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும், நீதிமன்றில் இருந்து தமிழ் மொழியில் கிடைத்தால் தான் ஏற்றுக் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.