web log free
April 20, 2024
kumar

kumar

புதிய மின்சார விலைச்சூத்திரத்தின் படி, முதல் 30 அலகுகளுக்கான கட்டணம் அலகு ஒன்றுக்கு 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, முதல் 30 அலகுகளுக்கு, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நிலையான கட்டணமாக 1,500 ரூபாயும், மற்றும் கட்டணமாக 3,000 ரூபாய் அறவிடப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித, ஞாயிற்றுக்கிழமை (18) தெரிவித்தார்.

“மின் கட்டண திருத்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதல் அலகு 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கவுள்ளது.

1,500 ரூபாய் நிலையான கட்டணங்களாகும். அதாவது 30 அலகுகளைப் பயன்படுத்துபவர் 3,000 ரூபாய் செலுத்த வேண்டும். மின் கட்டணம் மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 

இது கறுப்புச் சந்தையைத் தாண்டிய விலை உயர்வு. மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நோக்கத்தில் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது என்றார்.

நேற்று (18) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது எஹேடுவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்றுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதிகாரிகள் இன்று (19) அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு முதல் ஐந்து வருடங்களுக்கு பயிர் செய்யப்படாத அனைத்து வயல் நிலங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதுவரை 100,000 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்படாத நிலையில், 2023 ஆம் ஆண்டு அனைத்து வயல் நிலங்களும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் விவசாயம் செய்யப்படாத அனைத்து நிலங்களிலும் பயிர்ச் செய்கை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், தரிசு நிலங்கள் அனைத்தும் ஐந்து வருடங்களுக்கு அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டு விவசாய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

இதுவரை உழவு செய்யப்படாத தரிசு நிலங்களின் உரிமையாளர்கள் மீண்டும் நடவு செய்தால் பிரச்சினை இல்லை என்றும், விவசாயம் செய்யவில்லை என்றால் கண்டிப்பாக அந்த நிலத்தை அரசிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

ஐந்தாண்டுகளின் பின்னர் அந்தந்த காணிகளில் பயிர் செய்தவர்களுடன் ஒப்பந்தம் செய்து நில உரிமையாளர்கள் தேவையானால் விவசாயம் செய்ய முடியும் எனவும், விவசாயம் செய்யாத பட்சத்தில் காணியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் கட்டைக்காடு கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் குறித்த படகை கரை சேர்ப்பதற்காக கடற்படையின் டோரா படகுகள் அப்பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினருக்கு கொடுத்த தகவலுக்கு அமைய கடற்படையினர் தற்போது துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

படகில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக கப்பல் கரைக்கு வந்த பின்னரே மேலதிக விவரங்களை அறிய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. 

பம்பலப்பிட்டி ஸ்கெல்டன் வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் சொகுசு வீட்டினுள் பதுங்கியிருந்து கைத்துப்பாக்கி மற்றும் மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீட்டில் இருந்து கைத்துப்பாக்கி , 12 தோட்டாக்கள், மக்னீசியம், 100,000 ரூபா, 6,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 10 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோடீஸ்வர தொழிலதிபர் மற்றும் பணிப்பெண்கள் இருவரும் வீட்டில் இருந்த போதே இந்த திருட்டு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு - பொரள்ளை மயானத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பணிப்பாளரும், பிரபல தொழிலதிபருமான தினேஷ் சாஃப்டர் உயிரிழந்தமை தொடர்பில் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு இலக்கம் 02 நீதிமன்றத்தின் பதில் நீதவான் சம்பத் ஜயவர்தனவின் உத்தரவிற்கு அமைய, நேற்றைய தினம் தினேஷ் சாஃப்டரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.

இதன்படி, கழுத்து நெரிக்கப்பட்டமையே, உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

போலீஸ் விசாரணை கோணங்கள்

இந்த சம்பவம் தொடர்பில் பல விசேட போலீஸ் குழுக்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் படுகொலை விசாரணை பிரிவு ஆகியவற்றின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காணொளிகள் மற்றும் தொலைபேசி தரவுகளின் அடிப்படையிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொது மயானத்தின் ஊழியர்கள், தினேஷ் சாஃடரின் மனைவி உள்ளிட்ட சுமார் 15 பேரிடம் போலீஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

பொரள்ளை பொது மயானம்
 

தினேஷ் சாஃப்டர், பொரள்ளை பொது மயானத்திற்கு தனியாகவே வருகைத் தந்திருக்கலாம் என ஊகிப்பதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினேஷ் சாஃப்டரின் கார், பொது மயானத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதிக்கு அருகாமையில், நேற்று முன்தினம் இறுதிக் கிரியை ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த இறுதிக் கிரியைகளில் பங்குப்பற்றும் வகையில் சந்தேகநபர் வருகைத் தந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரும், ஊடகவியலாளருமான பிரையின் தோமஸிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

தாம் ஒரு கோணத்தில் மாத்திரம் விசாரணைகளை நடத்தாது, பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

பிரையின் தோமஸிடம் மாத்திரமன்றி, தமக்கு கிடைத்த அனைத்து சாட்சியங்களின் ஊடாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.

பிரையின் தோமஸிடம் விசாரணை

பிரபல சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரும், ஊடகவியலாளருமான பிரையின் தோமஸிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

உயிரிழந்த தினேஷ் சாஃப்டரிடமிருந்து பல கோடி ரூபா பணத்தை, பிரையின் தோமஸ் பெற்றுக்கொண்டுள்ளமை குறித்து, தினேஷ் சாஃப்டர் ஏற்கனவே போலீஸில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்.

தான் வழங்கிய பல கோடி ரூபாய் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காக, தான் செல்வதாக மனைவியிடம் தெரிவித்தே, தினேஷ் சாஃப்டர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, தனது நிறுவனத்தின் கடமையாற்றும் பணிப்பாளர் ஒருவருக்கும் இந்த விடயத்தை தினேஷ் சாஃப்டர் தெரிவித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில், தினேஷ் சாஃப்டரிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையின் தோமஸிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொரள்ளை போலீஸார், கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கொக்குணுவல முன்னிலையில் விடயங்களை முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான், சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையின் தோமஸிற்கு, வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளார்.

பிரையின் தோமஸிடம் இரண்டு கடவூச்சீட்டுக்கள் உள்ளதாகவும் போலீஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, இரண்டு கடவூச்சீட்டுக்களின் ஊடாகவும் வெளிநாடு செல்ல குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், தொலைபேசி தரவுகளின் ஊடாக விசாரணைகளை நடத்த போலீஸார் அனுமதி கோரிய நிலையில், தொலைபேசி தரவுகளை பெற்றுக்கொடுக்குமாறு உரிய தொலைபேசி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடந்தது என்ன?

இலங்கை

கொழும்பு - பொரள்ளை பொது மயானத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து, பிரபல தொழிலதிபர் தினேஷ் சாஃப்டர், கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட தினேஷ் சாஃப்டர், உடனடியாக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தான் கடனை பெற்றுக்கொள்வதாக தெரிவித்து, நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில், தினேஷ் சாஃப்டர், கொழும்பு - பிளவர் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.

இவ்வாறு வெளியேறிய தினேஷ் சாஃப்டரின் தொலைபேசிக்கு, அவரது மனைவி பல தடவைகள் அழைப்புக்களை மேற்கொண்ட போதிலும், தொலைபேசி செயலிழந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஜி.பி.எஸ் ஊடாக தொலைபேசி அலைவரிசையை சோதனை செய்த நிலையில், அவரது தொலைபேசி பொரள்ளை மயானத்தை காண்பித்துள்ளதை அவரது மனைவி அவதானித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தினேஷ் சாஃப்டரின் நிறுவனத்தில் பணியாற்றும் மற்றுமொரு பணிப்பாளருக்கு அறிவித்த நிலையில், அவர் பொது மயானத்திற்கு சென்ற போதே, தினேஷ் சாப்டர், தனது காரிற்குள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்தே, மயான ஊழியர்களின் உதவியுடன், தினேஷ் சாஃப்டர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பதினைந்து இலட்சத்திற்கு அண்மித்த அரச உத்தியோகத்தர்களை பன்னிரெண்டு இலட்சமாகக் குறைத்தால் அரச சேவையை மிக இலகுவாகப் பேண முடியும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே கூறுகிறார்.

இதுவரை காலமும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்புகள் வெற்றிடங்கள் இருக்கும் போது அல்ல, மாறாக அரசாங்கத்தின் பல்வேறு கொள்கை தீர்மானங்களினூடாகவே மேற்கொள்ளப்பட்டன என எம்.எம்.பி.கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். 

மேலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் இருபதாயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதுடன், இதே எண்ணிக்கையை மீண்டும் அரசுப் பணியில் அமர்த்தும் திட்டமும் சில காலமாக நடைமுறையில் உள்ளது என்றார். 

ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பொதுச் செலவினங்களைக் குறைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, வருடத்திற்கு இருபதாயிரம் அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றாலும், அவ்வாறானவர்கள் மீண்டும் அரச சேவைக்கு நியமிக்கப்பட மாட்டார்கள் என செயலாளர் குறிப்பிட்டார்.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக அடுத்த சில வருடங்களில் அரச சேவையை படிப்படியாக குறைக்க முடியும் எனவும் செயலாளர் தெரிவித்தார்.

மேலும், ஐந்து வருட காலத்திற்கு அரச உத்தியோகத்தர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதன் மூலம் அரச சேவையை திட்டமிட்ட வகையில் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், இந்த வேலைத்திட்டத்தின் மூலம் எந்தவொரு அரச ஊழியருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது எனவும் செயலாளர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஓய்வு பெறும் வயதை அறுபது ஆண்டுகளாகக் குறைப்பதன் மூலம், இந்த ஆண்டு இறுதியில் சுமார் இருபத்தைந்தாயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.

அனைத்து அரச உத்தியோகத்தர்களும் அறுபது வயதை அடையும் போது ஓய்வு பெற வேண்டும் என்ற வர்த்தமானி கடந்த 5ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.

கட்சி என்ற ரீதியில் தவறுகள் நடந்திருக்கலாம், அவற்றை திருத்திக் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனவே கட்சியாக மறுசீரமைக்கப்பட்டு அரசியல் ஸ்திரத்தன்மைக்கு இந்த நேரத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.

அதன் ஊடாக இந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை என்பன தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைப் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க, தேசிய மக்கள் சக்தியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜே.வி.பி.யின் தலைமைத்துவம் பிமல் ரத்நாயக்கவுக்கு வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்த தலைமை மாற்றம் இடம்பெறும் என கூறப்படுகிறது. 

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இரண்டு வருடங்களின் பின்னர் தனது அரசியல் வாழ்க்கையை விட்டு விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இச்செய்தி புனையப்பட்ட ஒன்று என்றும் அதில் உண்மையில்லை என்றும் அவர் கூறினார். 

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸ் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் இரகசிய பொலிஸார் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இது அமைந்துள்ளது.

பிரையன் தாமஸின் கைத்தொலைபேசியை பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் நேற்று பகல் முழுவதும் அவர் வீட்டில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.