web log free
April 19, 2025
kumar

kumar

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையில் தற்போது பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் இயக்கத்தின் உத்தியோகபூர்வ அலுவலகம் அடுத்த வாரம் இராஜகிரிய பிரதேசத்தில் திறக்கப்படவுள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அரசியல் இயக்கமொன்றை ஸ்தாபிக்கும் இந்தப் பணியில் லன்சாவுக்கு மேலதிகமாக, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் ஈடுபட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுமார் நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த புதிய பிரச்சாரத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அந்த எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தி அடுத்த அரசியல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் மேற்படி பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.

"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் எமது மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் கூட பாரதப் பிரதமரின் கோரிக்கையை நாம் வரவேற்கின்றோம்" இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்டபோதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
 
"பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சின் பிரகாரம் அவருடைய ஆலோசனையைக் கேட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசு செயற்படுவது நல்லம். அது நாட்டுக்கும் நல்லம். மக்களுக்கும் நல்லம்.
 
பாரதப் பிரதமர் மேலதிகமாக எதனையும் கேட்கவில்லை. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் நீங்கள் (இலங்கை அரசு) நிறைவேற்றிய 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்திச் செயற்பட வேண்டும் என்றே அவர் கோரியுள்ளார்.
 
இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் எமது மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் கூட பாரதப் பிரதமரின் கோரிக்கையை நாம் வரவேற்கின்றோம்.
 
மாகாண சபைகள் தற்போது வெறுமனவே உள்ளன. மீண்டும் அந்த மாகாண சபைகள் இயங்க வேண்டுமெனில் தேர்தல் ஒன்று மிகவும் அவசியம். எனவே, மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்தக் கோரியுள்ளார் பாரதப் பிரதமர். அதையும் நாம் வரவேற்கின்றோம்.
 
13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையான தீர்வாக அமைய முடியாது. இருந்தாலும் பாரதப் பிரதமர் சொல்லியதைக் கேட்டு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது நாட்டுக்கும் நல்லம்; அரசுக்கும் நல்லம்; மக்களுக்கும் நல்லம். எல்லோருக்கும் நல்லம்." - என்றார்.

வவுனியாவில் வீடொன்றினுள் புகுந்த காடையர்கள் , வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு , அவர்களுக்கு தீ வைத்துள்ளனர். 

சம்பவத்தில் பாத்திமா சம்மா சப்தீர் (வயது 21) எனும் குடும்ப பெண் உயிரிழந்துள்ளதுடன் , 2 வயது குழந்தை , 07 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகள் , 19 - 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள் மற்றும் 42 வயது மற்றும் 36 வயதுடைய இரு ஆண்கள் என 09 பேர் தீக்காயங்கள் மற்றும் , வாள் வெட்டு காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமி ஒருவருக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் ஆகும். அதனை முன்னிட்டு நள்ளிரவு 12 மணியளவில் குடும்பமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அந்நிலையில் இன்றைய தினம் அதிகாலை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த காடையர்கள் வீட்டின் உரிமையாளர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர். 

பின்னர் வீட்டில் இருந்த குழந்தைகள், சிறுவர்கள் , பெண்கள் உள்ளிட்ட 10 பேர் மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டு வாள் வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டு விட்டு , அவர்களுக்கும் , வீட்டிற்கும் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். 

சம்பவத்தில் வாள் வெட்டு மற்றும் தீக்காயங்களுக்கு உள்ளான 21 வயதான இளம் குடும்ப பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஏனைய 09 பேரையும் அயலவர்கள் மீட்டு , வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , விசேட பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

நேபாளம், மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பரிஸ் ஹடாட் சர்வோஸ், இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி இயற்கையாக ஏற்பட்ட நெருக்கடியல்ல, பொருளாதார தவறான நிர்வாகத்தின் விளைவாகும் என்று கூறுகிறார். 

இது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என்றும் அவர் கூறினார்.

இதன் காரணமாக வெளிநாட்டுக் கடன் பாரியளவில் குவிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021 மற்றும் 2022 க்கு இடையில், இலங்கையில் வறுமை 13.1 வீதத்தில் இருந்து 25 வீதமாக இரட்டிப்பாகியுள்ளது என்றும், இந்த வருட இறுதிக்குள் (2023) வறுமை மேலும் 2.4 வீதத்தால் அதிகரிக்கும் என்றும் ஃபாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பலர் வறுமையின் அதிர்ச்சியை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு தாயும் மகளும் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஹகுரன்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹகுரன்கெட்ட ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய தாயும் ஒரு வயதுடைய 8 மாத பெண் குழந்தையும் காணாமல் போயுள்ளனர்.

குறித்த பெண்ணின் தாயார் நேற்று முன்தினம் (20) காணாமல் போயுள்ளதாக ஹகுரன்கெட்ட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த நபரும் அவரது சிறிய மகளும் காணாமல் போன தினத்தன்று லங்காம பேரூந்து ஒன்றில் ஹங்குரன்கெத்த, ரிக்கிலகஸ்கட பகுதிக்கு வந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் ஹகுரன்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு அந்த பெண்ணும் அவரது மகளும் பஸ்சில் வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹகுரன்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அங்குருவத்தோட்ட, உருதுதாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய தாயும், அவரது 11 மாத பெண் குழந்தையும் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், நேற்று (21ஆம் திகதி) காலை வீட்டுக்கு அருகிலுள்ள புதரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் நைனி டால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மகி ஆர்யா (28). இவரது காதலர் அங்கித் சவுகான். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் மகி ஆர்யாவை, அடிக்கடி அங்கித் செக்ஸ் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த மகி ஆர்யா, காதலரைக் கொல்ல முடிவு செய்தார். இதற்காக தனது புதிய காதலர் தீப், வீட்டு வேலைக் காரி உஷாதேவி, அவரது கணவர் ராமா வதார் ஆகியோரையும் கூட்டு சேர்த்துள்ளார்.

கொலை செய்வது எப்படி என்பதை 'கிரைம் பேட்ரோல்' என்ற தொலைக் காட்சி தொடரை பார்த்து தெரிந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் கொலை செய்த பிறகு தடயங்களை அழிப்பது எப்படி என்பதையும் யூடியூப் மூலம் பார்த்து உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ரியாஸ் (24). இவரது தங்கை ஆசிபா (18). ஆசிபாவும் அதே பகுதியை சேர்ந்த சந்த் பாபுவும் காதலித்து வந்தனர்.

சந்த்பாபு வேறு மதத்தை சார்ந்தவர் என்பதால் காதலை கைவிடுமாறு ஆசி பாவிடம் ரியாஸ் கூறியுள்ளார். ஆனால் ஆசிபா சந்த்பாபுவை தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரியாஸ் ஆசிபாவை கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து தங்கை என்றும் பாராமல் ஆசி பாவை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

பின்னர் தலையை துண்டாக வெட்டி பையில் வைத்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் போலீஸ் நிலையத்துக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து ரியாசை கைது செய்தனர். விசாரணையில் காதலை கைவிட மறுத்ததால் தங்கை ஆசிபாவை கொலை செய்ததாக ரியாஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பிள்ளையின் தாயான 19 வயதுடைய தனது மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.  

10 வயதில் இருந்தே மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளதாகவும், வெளியில்  கூறினால் கொலை  செய்வதாக மிரட்டல் விடுத்ததாகவும் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எப்பாவல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரின் உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறைத் தீர்ப்பதற்காகச் சென்று தந்தை மற்றும் கணவனுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது கணவர் இடையில் இறங்கிய பின்  யாருமற்ற இடத்தில் வைத்து தந்தை மகளை மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

கடைசியாக நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், 10 வயதிலிருந்தே தனது தந்தை தன்னை அவ்வப்போது பலாத்காரம் செய்து வருவதாகவும், தான் எதிர்க்கும் ஒவ்வொரு முறையும் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் அப்பெண் அளித்த புகாரில் தெரியவந்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

சிறுவயதில் இருந்தே நடந்து வரும் இந்த செயலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இனியும் பொறுக்க முடியாத நிலையில் தாயாருக்கும், கணவருக்கும் தெரிவித்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பணியை முடித்துக் கொண்டு படைமுகாமிற்குச் சென்று கொண்டிருந்த புறக்கோட்டை காவல்துறையைச் சேர்ந்த இரு பெண் காவல்துறை அதிகாரிளிடம் பாலியல் சில்மிஷம் செய்ய முயன்ற நபர் ஒருவரை சுற்றியிருந்தவர்கள் மிகுந்த பிரயத்தனத்துடன் பிடித்துள்ளனர்.

இரண்டு பொலிஸ் பெண்கள் மற்றும் குழுவினர் சந்தேகரை பொலிஸாரிடம் ஒப்படைத்த் அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

53 வயதுடைய நபர், நேற்று இரவு 7 மணியளவில், சீருடை அணிந்திருந்த இரு பொலிஸாரையும் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக, புறக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அகுருவாதோட்டையில் இளம் தாய் மற்றும் சிசு மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை அகுருவத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் கணவரின் நெருங்கிய உறவினர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் வரகாகொட சல்காஸ் மாவத்தை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை அங்குருவாதொட்ட பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆனந்த சில்வா தலைமையிலான குழுவினர் அங்கு திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் வீட்டில் காணப்படாத நிலையில், அதன் பின்பகுதியிலும் அதனைச் சுற்றியிருந்த காடுகளிலும் முழுமையான தேடுதலின் போது சந்தேக நபர் சில வாழை மரங்களுக்கு பின்னால் மறைந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் உடனடியாக செயற்பட்ட பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி அவரை துரத்திச் சென்று அவருடன் சண்டையிட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்போது சந்தேக நபர் பெரிய கத்தரிக்கோல் போன்ற கூரான ஆயுதத்தால் நிலையத் தளபதியை பல தடவைகள் தாக்க முற்பட்டபோதும், தோல்வியின் காரணமாக அவர் தனது மார்பில் பல தடவைகள் கத்தியால் குத்திக்கொண்டுள்ளார்.

சந்தேக நபர் ஹொரணை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அகுருவத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd